தற்போதுள்ள காலநிலை மாற்றம் உடல் நலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவகாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த கோடை காலத்தில் உடல் வறண்டு, சருமம் பொலிவிழப்பத்துடன், சோர்வும் ஏற்படுகிறது.
எனவே இந்த கோடைக் காலத்தில், கரட் ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள விட்டமின் ஏ, எமது கண்ணுக்கு குளிர்மையை தருவதுடன், முதுமையைத் தடுக்கும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் உள்ளவர்கள் சுரைக்காய் கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான அமிலம் மட்டுப்படுத்தப்படும்.
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ் உடலில் உள்ள இரத்த நாளங்களை விரியச் செய்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும்.