அழகான கதை அம்சங்களோடு புதிதாக வரவுள்ள திரைப்படம் தான் ஜூலை காற்றில். கே.சி. சுந்தரம் இயக்கத்தில் ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சதீஷ் என இன்னும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் மற்றும் கார்த்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் கஸ்தூரி.அப்போது கார்த்தியை மேடைக்கு அழைத்து, உங்களுடைய அப்பா இங்கு இல்லை அதனால் வேகமாக ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்வோம் எனக் கூறி, அருகில் வர, கார்த்தி இது இப்போ ரொம்ப தேவையில்லாத விடயம் எனக் கூறிக்கொண்டு ,செல்ஃபி எடுக்காமல் உரையாற்ற சென்றுள்ளார்.
அவர் பேசும் போது" ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டது, இந்த செல்ஃபி என்கிற விஷயத்திற்கு. யாருக்கும் மரியாதையே கிடையாது. கேட்டு போட்டோ எடுக்கணும் என்று சொல்லிக்கொண்டு மூஞ்சிக்கு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துவது. தொலைபேசியின் பிளாஷ் வேற பின்னாடி ஒன்று, முன்னாடி ஒன்று. அவ்வளவு பிளாஷ் கண்ணில் பட்டால் மைக்ரேன் என்ற தலைவலி இருக்கிறவன் நிலைமை யோசிக்கிறதில்லையா யாருமே . ஒரு விவஸ்தையே கிடையாது என்று நினைக்கிறேன். மரியாதையாக கேட்டுவிட்டு போட்டோ எடுக்க வேண்டும் என்ற பண்பு கூட தெரியாதவங்களா? ரொம்ப வருத்தமாக உள்ளது" என கார்த்தி ஆவேசமாக பேசியுள்ளார்.