பாகிஸ்தானுக்கு உலக நாடுகளின் அழுத்தம் அதிகரித்து வந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய இம்ரான் கான், பாகிஸ்தான் மண்ணில் இனி எந்த பயங்கரவாத அமைப்பிற்கும் இடமில்லை. அவர்கள் ஏனைய நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதை அனுமதிக்க முடியாது என்றும், பாகிஸ்தானில் இருந்து மற்றைய நாடுகள் மீதான எந்த ஒரு பயங்கரவாதத்தையும் இந்த அரசாங்கம் அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புக்களை வெளியேற்ற போவதாக இம்ரான் கான் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிட்ட மறுநாளே, தெற்கு பாகிஸ்தானில் பொதுகூட்டம் ஒன்றில் மேற்க்குறித்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பாக்கிஸ்தான் அதிகாரிகள் தீவிரவாதிகளின் வெளியேற்றம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில், பயங்கரவாத அமைப்புக்களை பாகிஸ்தான் மண்ணில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம். இந்தியாவின் கோபம் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.