இந்தியாவில் அடுத்ததாக இடம்பெறவுள்ள தேர்தலுக்கு முன்னர், எந்த நேரத்திலும், பாகிஸ்தான் மீது இந்திய பாதுகாப்பு படை, தாக்குதல் நடத்தக்கூடும் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வுகூறியுள்ளார்.
இந்தியாவின் புல்வாமா தாக்குதலுக்கு பின்னர், இந்தியா- பாகிஸ்தான் உறவில் நிலவிய விரிசல் மேலும் அதிகரித்தது. இந்த தாக்குதலுக்கு பல உலக நாடுகள் தமது அதிருப்தியை வெளியிட்டன.
எனினும் தற்போது இந்த பதற்ற நிலை சற்று தணிந்துள்ள போதிலும், இந்திய பாதுகாப்புப் படை, பாகிஸ்தான் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என, பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
''நம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்து இன்னும் நீங்கவில்லை. தேர்தலுக்கு முன்பாக இந்திய மத்திய அரசு, நம்மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம். இதனை எதிர்கொள்வதற்கு அனைத்து விதங்களிலும் நாம் தயாராக இருக்கின்றோம்'' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.