இறந்த எலியின் உடலத்தை பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தல்
SooriyanFM Gossip - இறந்த எலியின் உடலத்தை பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
இங்கிலாந்தில் உள்ள சிறை ஒன்றில், இறந்துபோன எலியின் உடலத்தை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இறந்த எலியின் வயிற்றுக்குள் வைத்து குறித்த போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன. அத்துடன், பல செல்போன்கள் சிம் அட்டைகள் என்பனவும் எலியின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
தெற்கு இங்கிலாந்தில் டார்ஸ்டடில் உள்ள சிறையிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சந்தேகத்திற்கு இடமான முறையில், இறந்துகிடந்த 3 எலிகளின் வயிற்றைக் கிழித்துப் பார்த்த போது, இந்த கடத்தல் சம்பவம் குறித்து கண்டறியப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக, பிரிட்டன் சிறைத்துறை அமைச்சர் ரோரி ஸ்டீவார்ட் குறிப்பிட்டுள்ளார்.