சமீபத்தில் வீட்டில் பணியாற்றும் வேலைக்கார பெண்ணை சித்திரவதை செய்ததாகவும், உறவினர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சம்பளம் கொடுக்காமல் கொடுமை படுத்தியதாகவும் பானுப்ரியா மீது சர்ச்சை எழுந்தது.
அந்த சர்ச்சை அவரின் பெயரை பெரிய அளவில் பாதித்து விட்டது என்றும் சொல்லலாம். 1998ல் திருமணம் செய்துகொண்ட பானுப்ரியா 7 வருடங்கள் கழித்து விவாகரத்து செய்து கொண்டார். தற்போது தனது மகளுடன் பானுப்ரியா சென்னையில் வசித்து வருகிறார்.
அவரது வாழ்க்கை பற்றி ஒரு வார இதழுக்கு பேட்டி அளித்துள்ள அவர், "முன்பெல்லாம் நிறைய கோபம் வரும். இப்போ கோபத்தைக் குறைச்சுக்கிட்டேன். பெரிசா எந்த விஷயத்துக்கும் ஆசைப்படமாட்டேன். எதிர்கால வாழ்க்கைப் பற்றி எந்த எதிர்பார்ப்பும் எனக்கில்லை" என கூறியுள்ளார்.