ராஜாளி பறவை எனப்படும் பறவை, உலகிலேயே மிகவும் வேகமாக பறக்கும் பறவை என்று கூறப்படுகின்றது.
‘பால்கன்’ என்றும் அழைக்கப்படும் இந்தப் பறவை, மணிக்கு 389 KM வேகத்தில் பறக்கும் திறனை கொண்டது. இதன் மேலும் சில சிறப்புகள் என்னவென்றால் சுமார் 2 KM தொலைவில் இரை ஒன்றை கண்டால், அடுத்த 4 நிமிடங்களில் குறித்த இரையைப் பிடித்து விடும். ராஜாளி பறவையின் பலம் என்னவென்றால் பார்வையும் அதீத வேகமும்தான் என்று கூறப்படுகின்றது. ராஜாளி பறவைகள் அரபுநாடுகளில் அதிகம் வாழ்வதாக கூறப்படுகின்றது.
இதைவிட இன்னொரு சுவார்சியத் தகவல் என்னவென்றால், ஐக்கிய அரபு அமீரகத்தில் பலரும் ராஜாளியை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். ராஜாளி பறவைகளுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ராஜாளி பறவையை அதன் உரிமையாளர்கள் விமானத்தில் எடுத்து செல்ல ஏதுவாக, அந்த பறவைகளுக்கென தனியாக பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.
இப்படியான சலுகைகள் இருக்கும் நிலையில், அபுதாபியில் ராஜாளிகளுக்கு என தனியாக சிறப்பு மருத்துவமனை ஒன்று முதன் முறையாக திறக்கப்பட்டுள்ளது. இங்கு அவற்றின் அலகு, கால் நகங்களை சுத்தம் செய்தல், தேவையான மருந்து வழங்குதல் போன்ற முதலுதவி சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை வரை, அனைத்து வகையான மருத்துவ சேவைகளும் வழங்கப்படுகின்றன.