லண்டனில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் செல்சி மலர் கண்காட்சி நடைபெறும் இந்தவருடத்திற்கான கண்காட்சி நேற்று பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. மலர் கண்காட்சியை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று பார்வையிட்டார்.
நேற்று அங்கு சென்ற ராணி, தோட்ட பராமரிப்பாளர்களை சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அத்துடன், பல்வேறு வகையான மலர்கள் மற்றும் மரத்தினால் செய்யப்பட்ட கலைநயமிக்க பொருட்களை கண்டு ரசித்தார். அப்போது மலர்களின் தனித்துவம் குறித்து ஊழியர்கள் எடுத்துரைத்தனர். மேலும், இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவி கேத் மிடில்டனும் உடன் சென்றனர். முன்னதாக, அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் அவர்களின் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.இதை தொடர்ந்து, தோட்டக்கலை நிபுணர்களுடன் இணைந்து கேத் உருவாக்கிய பூங்காவையும் அரசு குடும்பத்தினர் பார்வையிட்டனர்.