இவர் கிளைட் (Glide Foundation ) என்ற தொண்டு நிறுவனம் மூலம், இவ்வாறான உதவிகளை செய்து வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம், வீடுகள் இல்லாதவர்களுக்கு இருப்பிட வசதி, உணவு, பிற அத்தியாவசிய உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் அடக்குமுறை வன்முறை போன்றனவற்றினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மீதும், இந்த நிறுவனம் கவனம் செலுத்தி வருகின்றது.
இந்த தொண்டு நிறுவனம் எவ்வாறு நிதிகளை சேகரிக்கின்றது என்றால், ஒவ்வொரு வருடமும் ஏலம் ஒன்றை நடத்துகின்றது. அந்த ஏலத்தின் மூலம் பணம் கிடைக்கின்றது.
மேலும், குறித்த ஏலத்தில் பங்கேற்பவர்களில் அதிக தொகை தருபவர்களுக்கு வாரன் பூபட்டுடன் ஒரு வேளை உணவு உண்ண வாய்ப்புக் கிடைக்கும்.
அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் ஒரு நபர் வாரன் பூபட் உடன் உணவருந்துவதற்காக $4.57 மில்லியன் டொலர்கள் கொடுப்பதற்கு முன்வந்துள்ளார். இது இலங்கை பெறுமதிக்கு கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய்கள் ஆகும். குறித்த நபர் இந்த தொகையை செலவிடும் பட்சத்தில் ஒரு நபருடன் உணவு அருந்த இந்த அளவிற்கு செலவிடப்பட்ட அதிக தொகை இதுதான் என்ற சாதனையாக இது இருக்கும் என கருதப்படுகிறது.