கத்தி எடுத்தவனுக்கு சாவு வருதோ என்னமோ,
கத்தி படம் எடுக்கிறவர்களுக்கும், கத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கும் மட்டும் சிக்கலுக்கு குறைவேயில்லை.
பெயர் வைத்த நாளில் இருந்து மாறி மாறி சிக்கல்.
ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத்தின் இசையில்,
விஜய் நடிக்கும் திரைப்படம் 'கத்தி'.
இப்படம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை தொடர்ந்து சிக்கல்கள் வந்து கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.
இது இவ்வாறிருக்கையில் இப்படக்குழுவினரோ தங்களின் படவேலைகளை தொடர்ந்து செய்த வண்ணமே உள்ளனர்.
அண்மையில் இசையமைப்பாளர் அனிருத் ' கத்தி' இசையில் புதுவிதமான மற்றும், பல சுவாரஷ்யமாக விடயங்களை இணைத்துள்ளதாக கூறி தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தார்'.
கத்தி பாடல்களை ரசிகர்கள் எதிர்பார்திருக்கும் இந்த நேரத்தில், கத்தி பாடல் வெளியீட்டு உரிமையை வாங்க முன்வந்த பெரிய நிறுவனமும் இப்போது தயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. வேறெந்த நிறுவனமும், இதன் உரிமையை வாங்க முன்வராத நிலையில், இம்மாதம் நடைபெறவிருந்த இசைவெளியீட்டு விழா இன்னும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படக்குழுவினரும் இந்த சிக்கல்கல் தீரும் வரை அமைதி காப்போம் என கூறியுள்ளனர். வழமையா கத்தி தான் வெட்டும்...ஆனா இங்க கத்தியே வெட்டுப்பட்டுகொண்டிருகிறது....
இதுக்கு என்ன தான் முடிவு?