இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடிவருகிறது.
முதல் மூன்று போட்டிகள் நிறைவில் 2 க்கு 1 என்று இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
கட்டாய வெற்றி என்ற நெருக்கடியில் இந்தப் போட்டியில் இந்திய அணி களம் காண உள்ளது. இந்தப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் உபாதைக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக, இருவரும் இங்கிலாந்து தொடரில் இருந்து விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று வீரராக அன்சுல் கம்போஜ் அணியில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.