இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து 'அரசன்' என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படம் இரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருந்தது. மேலும், அத்திரைப்படம் தொடர்பான வதந்திகளும் இணையத்தில் பரவி வருகின்றன. இதனை பொய்யாக்கும் விதத்தில் ‘அரசன்’ தயாரிப்பாளர் தாணு பேட்டியொன்று அளித்துள்ளார். “3 நாட்களுக்கு முன்பு சிம்பு – வெற்றிமாறன் இருவரும் சந்தித்து பேசினார்கள். அடுத்தகட்டப் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கும். சிம்பு மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வரும் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும். இப்படத்தின் வசூல் ஒரு மைல்கல்லாக இருக்கும்.
‘அரசன்’ எப்போது வெளியீடு என்பதை இயக்குநர் வெற்றிமாறன் முடிவு செய்வார். இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். அவர் நடிக்கவில்லை என்பது வதந்தியே. இப்படம் தொடர்பான அதிகாரபூர்வமான செய்திகள் எனது தரப்பில் வருபவை மட்டுமே உண்மை” என்று தெரிவித்துள்ளார் தாணு.