இரத்த சோகையை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்.
இரத்த சோகை என்பது இரத்தத்தில் உள்ள ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்கள் போதுமான அளவு இல்லாததால் உடலில் உள்ள திசுக்களுக்கு Oxygen வழங்கல் குறையும் போது ஏற்படுவதாகும்.
இந்த நிலை போதுமான Oxygen கொண்டு செல்லும் இரத்தத்தின் திறனைக் குறைக்கிறது, மற்றும் இரத்த சோகையின் பல அறிகுறிகளை ஏற்படுத்துகிறது, இது பலவீனமாகவும் சோர்வாகவும் உணர வைக்கிறது.
இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரும்பு சத்து நிறைந்துள்ள உணவுகளை அதிகளவு உட்கொள்வதன் மூலம் உடலில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
எனவே ஈரல், கீரை வகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும் அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு B12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.