17 Views
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி கடந்த 15ம் திகதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில் இந்தியா , இலங்கை இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியுள்ளது. கொழும்பில் நடைபெறும் இப்போட்டிக்கான நாணைய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இதையடுத்து, களமிறங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 475 ஓட்டங்கள் எடுத்தது.
இந்நிலையில், 2ம் நாள் ஆட்டத்திலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, உணவு இடைவேளை வரை இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 419 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 63 ஓட்டங்களிலும், துருவ் ஜோரேல் 59 ஓட்டங்களிலும் களத்தில் உள்ளனர். இந்தியா வலுவான நிலையில் உள்ளதால் இப்போட்டியிலும் இந்தியா வெற்றிபெறும் என இரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.