தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'டேர் டெவில்' என பெயரிடப்பட்டுள்ளது. ஆதிக் ரவிகுச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இததிரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் சிறப்பம்சமாக, நடிகர் அஜித்தின் மனைவியும், பிரபல நடிகையுமான ஷாலினி அஜித் குமார் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகப் புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவர் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான Brave Hearts Production மூலமாக இத்திரைப்படத்தைத் தயாரித்து வருகிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் இருந்து விலகியிருந்த ஷாலினி, இந்தப் படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறைக்குள் தயாரிப்பாளராக நுழைந்திருப்பது இரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே, 'அமர்க்களம்' திரைப்படத்திற்குப் பிறகு அஜித்தும் ஷாலினியும் இந்தத் திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையில் ஜோடியாக நடிக்கப்போகிறார்கள் எனவும், இல்லையேல் இத்திரைப்படத்தில் ஷாலினி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் தீயாய் பரவி வருகிறது.
ஆனால், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஷாலினிக்கு திரைசில் மீண்டும் நடிக்கும் எந்தவிதமான எண்ணமும் இல்லை என்றும், அவர் கேமராவுக்கு முன்பாக தோன்றுவதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, திரைக்குப் பின்னால் இருந்து மட்டுமே இத்திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகளைக் கவனித்துக்கொள்வார் என்றும் உறுதியான தகவல்கள் வந்துள்ளன.