துலீப் கிண்ண தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டியில், தெற்கு - வடக்கு மண்டல அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில், நாணய சுழற்சியில் வென்ற வடக்கு மண்டல அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி தெற்கு மண்டல பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இதன் காரணமாக முதல் இன்னிங்ஸில் 195 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது .
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தெற்கு மண்டல அணி பொறுப்புடன் விளையாடி தலைவர் திலக் வர்மா எந்தவித ஆறு ஓட்டங்களும் பெறாமல் சதம் அடித்துள்ளார்.
அவர், 250 பந்துகளில் 9 நான்கு ஓட்டங்களுடன், 116 ஓட்டங்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 312 ஓட்டங்கள் குவித்தது. இதையடுத்து வடக்கு மண்டல அணி 2-வது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.