இவ்வாறான நிலைக்குப் பின்னால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் சில தொழில்நுட்பக் கோளாறுகளும் முக்கிய காரணமாக அமைகின்றன.
தற்போதைய காலகட்டத்தில் AI Voice Cloning தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவரின் குரலை வெறும் சில விநாடிகளில் அப்படியே நகலெடுக்க முடியும்.
சைபர் குற்றவாளிகள் சமூக வலைத்தளங்களில் உள்ள உங்களது காணொளிகளிலிருந்தும் குரலைப் பதிவு செய்து, உங்களைப் போலவே பேசி உங்கள் உறவினர்களிடம் பணம் கேட்பது போன்ற மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.
சில நேரங்களில் அறிமுகமில்லாத எண்களிலிருந்து அழைத்து நம்மை பேச வைத்து, அந்த குரல் மாதிரியைச் சேகரித்து பிற்கால மோசடிகளுக்கும் பயன்படுத்துகிறார்கள்.
இது தவிர, வலையமைப்பு சமிக்ஞை குறைபாடு மற்றும் VoLTE, Wi-Fi Calling போன்ற தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகவும் குரல் மாறுபட்டு ஒலிக்க வாய்ப்புள்ளது.
எனவே, தெரியாத எண்களிலிருந்து அழைப்பு வரும்போது அவதானமாக இருப்பதுடன், அவசரத் தேவைகளுக்காகப் பணம் கேட்டு யாராவது அழைத்தால் உடனடியாக வேறு எண்ணுக்குத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக் கொள்வது பாதுகாப்பானதாகும்.