விஜய் தந்தை மகன் என இரண்டு வேடங்கள், ஹன்சிகா, சுருதி ஹாசன், முன்னாள் கனவுக்கன்னி ஸ்ரீதேவி, நான் ஈ சுதீப் போன்ற நட்சத்திரங்களில் உழைப்பில் உருவாகிவரும் திரைப்படம் ''புலி'' .
வரவிருக்கும் விஜயின் புதிய படம்.
எதிர்பார்ப்புக்கள், இரசனைக் கேள்விகள் நிறைந்து கிடக்கிறது இரசிகர்கள் மத்தியில் இப்படம் தொடர்பாக!
சச்சின், வில்லு திரைப்படங்களைத் தொடர்ந்து விஜயின் மூன்றாவது படத்தில் இசையமைப்பில் கைகோர்த்துள்ளார் தேவிஸ்ரீ பிரசாத்.
இப்படம் தொடர்பாக தேவிஸ்ரீ பிரசாத் கூறுகையில்
'' விஜயின் படங்களுக்கு இசையமைப்பது ஒரு இனிமையான அனுபவம். இந்தப்படத்தில் புதுமையான இசையைக் கொடுக்க முடிவு செய்துள்ளேன். பெயரே பெரிய எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கு. எனவே, இந்தப்படம் வித்தியாசமான கதையாகவும் படமாகவும் திரைக்கு வரும். இந்தப்படத்துக்கு வந்துள்ள இசை போல நான் வேறு படங்களுக்கு இசையமைத்தது கிடையாது. மொத்தமாக 6 பாடல்கள் படத்தில். விஜய் பாடுகின்ற பாடல் பற்றி நான் இப்பொழுது ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. இந்தக்கால தலைமுறைக்கு பிடித்த குத்துப் பாடல்கள் மற்றும் மென்மையான பாடல்கள் அத்தனையும் படத்தில் உண்டு. யாரும் ஏமாற வேண்டி இருக்காது.
3 பாடல்களுக்கு இசையமைத்து விட்டேன். ஒரு பாடலுக்கான படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டது மகிழ்ச்சி. வைரமுத்து சார்தான் பாடல்களை எழுதி இருக்கிறார்.
என்னோட பாடல் குழந்தைகளுக்கும் பிடிக்கும் பாடல்களாக இருக்கணும் என்பது என்னோட ஆசை'' என்கிறார் தேவிஸ்ரீ பிரசாத்.
இப்போவே புலி மீதான ஆர்வம் அதிகரித்து விட்டதுதானே?
#குழந்தைகளுக்கு பிடிக்கும், நமக்கு....?
