Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கை சினிமா படமாகிறது. இந்திராவின் இளமை கால வாழ்க்கை, குடும்பம், அரசியல் பணிகள் இப்படத்தில் இடம் பெறுகிறது. அவர் சுட்டுக் கொல்லப்பட்டதையும் இதில் காட்சிபடுத்துகின்றனர். இப்படத்துக்கான திரைக்கதை தயாராகிவிட்டது

இந்திரா காந்தி வேடத்தில் நடிக்க பொருத்தமான நடிகையை தேடி வந்தனர். தற்போது மல்லிகா ஷெராவத் தேர்வாகியுள்ளார். இவர் சமீபத்தில் ‘டர் டி பாலிடிக்ஸ்’ என்ற அரசியல் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தில் அவர் தேசிய கொடியை உடுத்தி கொண்டு போஸ் கொடுப்பது போன்று வெளியான படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.

படக்குழுவினர் நிறைய நடிகைகளை பரிசீலித்து இறுதியில் மல்லிகா ஷெராவத்தை தேர்வு செய்துள்ளனர். இந்திரா காந்தியின் கம்பீர சாயல் மல்லிகா ஷெராவத்துக்கு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

மல்லிகா ஷெராவத்தும் இந்த சவாலான கேரக்டரில் நடிக்க விருப்பம் தெரிவித்து உள்ளார். தன்னை அந்த வேடத்துக்கு தயார்படுத்தியும் வருகிறார். தற்போது நேரு குடும்பத்தினரின் ஒப்புதலுக்காக இது அனுப்பப்பட்டு உள்ளது.

இந்திரா வேடத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்க ஆட்சேபனை இல்லை என்று அவர்கள் தெரிவித்ததும் படப்பிடிப்பை துவங்கும் முடிவில் இருக்கின்றனர்.

CastroRahul

373 Views

சரிந்திருந்த தனது மார்க்கெட்டை ஐ படத்தின் மூலம் நிமிர்த்தி சரித்திரமாய் மாற்றி எழுதிய நடிகர் விக்ரம். நடிப்புக்கு இலக்கணமாய் இவரது பெயரும் சினிமாவின் வரலாற்றுப் பக்கத்தில் பதியப்பட்டு விட்டது என்பது உண்மை.

இந்நிலையில், ஐ கொடுத்திருக்கும் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர், விக்ரம் அவதானமாக தனது படங்களுக்கான கதைகளை தெரிவு செய்து வருகிறார். அப்படி தெரிவு செய்த கதைதான் ''பத்து என்றதுக்குள்ள''. இந்தப்படம் நிறைவடைந்ததும்,இன்னும் இரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கௌதம் மேனன் இயக்கம் ஒரு படத்திலும், அரிமா நம்பி இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கம் படத்திலும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனந்த் ஷங்கர் இயக்கம் படத்தில்தான் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து புகைந்துள்ளன.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
349 Views
அஜித் விஜய்யோடு தனது சினிமா வாழ்க்கையை அமோகமாக தொடங்கியவர் நடிகை சங்கவி. அஜித்துடன் அமராவதி படத்தில் தன் சினிமா பயணத்தை ஆரம்பித்தவர், பின்னர் விஜய்யுடன் ரசிகன் படம் தொடங்கி இன்னும் பல படங்களில் நடித்து முன்னணிக்கு வந்தார்.

கவர்ச்சிக்கு கூட, நோ சொல்லாத அம்மணி, தன் பங்குக்கு அள்ளி வீசினார். பல படங்களிலும், பல நடிகர்களோடும் ஜோடியானார். பின்னர் என்ன ஆனதோ, அவருக்கு இருந்த கிராக்கி கொஞ்சம் கொஞ்சமாய் குறையத் தொடங்கி ஒரு கட்டத்தில், எந்த வாய்ப்புக்களுமே இல்லாமல் போனது.

பட விழாக்கள், சினிமா நிகழ்வுகளில் அவ்வப்போது தன்னை காண்பித்துக் கலந்துகொண்ட சங்கவி, இப்பொழுது மீண்டும் நடிக்க வந்துள்ளார். அதுவும், கௌரவ வேடத்தில்!

நவீன் இயக்க, இயக்குனர் சமுத்திரக்கனி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக தனது அடுத்த ரவுண்டை ஆரம்பித்துள்ளார் இந்த மாஜி நடிகை சங்கவி. இனி அண்ணி, மற்றும் அக்கா வேடங்களிலும் நடிக்கலாம் என முடிவெடுத்துள்ளாராம்.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
486 Views
ஆர்யாவின் மதராசப் பட்டிணம் படத்தின் மூலம், தமிழுக்குள் நுழைந்த அழகுப் புயல் எமி ஜாக்சன். தமிழே புரியாது. ஆனாலும், தமிழில் இப்பொழுது பேசப்படுகின்ற & அனைவராலும் விரும்பப்படுகின்ற நடிகை அம்மணிதான். இப்பொழுது உதயநிதியுடன் ஒரு படத்தில் நடித்துவருகின்றவர் அமைதியாக தனக்கு ஏற்ற கதைகளை தெரிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், எமி நிருபர்களின் கேள்விகளுக்காக மௌனம் களைந்து பேசினார். என்னை பார்க்கின்றவர்கள், நான் கவர்ச்சியான ஆடைகளுக்கும் அந்த மாதிரியான நடிப்புக்கும் தான் பொருத்தமானவள் என நினைக்கிறார்கள். ஆனால், எனக்கு அந்த ஆடைகளை விட புடவைதான் பொருத்தமானது என நான் நினைக்கிறேன். அதுதான் பெண்களை அழகாகவும் கவர்ச்சியாகவும் காட்டுகின்ற ஆடை. எனவே, உதயநிதியோடு நடிக்கும் படத்தில் மடிசார் மாமியாக நடிக்கிறேன். அதில் தான் எனது புடவைக் கனவு நிறைவேறவுள்ளது.

அத்தோடு, என்னைப் பொறுத்தவரைக்கும் பெண்களுக்கு அழகு புடவைதான். அத்தோடு கவர்ச்சியானதும் அதுவேதான் என்கிறது இந்த ஆங்கிலப் பறவை.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-

Amy Jackson - Sexy in Bikini

Amy Jackson
346 Views
மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற பெங்களூர் டேஸ் எனும் படம் தெலுங்கு மற்றும் தமிழில் ரீமேக் ஆகிறது. ஆரம்பத்தில் இந்தப்படத்தில் நடிப்பதற்காக, சமந்தா & சித்தார்த்திடம் பேசப்பட்டது. அப்போது அவர்களும் காதலர்களாக இருந்தபடியினால், ஒத்துக்கொண்டார்கள். ஆனாலும், இப்போது காதல் கசந்து போய் பிரிந்து விட்டதினால் மறுத்து விட்டார்கள்.

ஐயோ, பாவமே என்கிற அளவில் பட யூனிட் தவித்துப் போனார்கள். பின்னர், ஆர்யா, ஸ்ரீதிவ்யா, ராணா, பாபி சிம்ஹா, நித்யாமேனன் போன்ற நடிகர்கள்கள் பட்டாளமே இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், படத்துக்கு போடப்பட்டுள்ள பட்ஜெட் அதிகம் என்பதால், இன்னுமொரு பெரிய பிரபலத்தை இப்படத்திற்கு கொண்டு வந்தால் இன்னும் எதிர்பார்ப்பும் வியாபாரமும் அள்ளும் எனும் நோக்கில், படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவிடம் பேசப்பட்டு வருகிறது.
     அவர் இன்னும் முடிவினை சொல்லவில்லை. காரணம், அஜித் நடிப்பில் உருவாக உள்ள தல 56 படத்தில், ஜோடியாக ஸ்ருதிஹாசன் மற்றும் நயன்தாரா  இடையில் தான் பெயர் பரிசீலனை நடந்து வருகிறது.

இது இப்படி இருக்கும்போது, ஸ்ருதிஹாசன் அஜித் படத்தில் நடிப்பது சாத்தியமில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால், நயன்தாராதான் நாயகி என்பது எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த ஆர்யாவின் படத்தில் நடிக்க போய் விட்டால், அஜித் பட வாய்ப்பு கை நழுவிப் போய்விடும் என்பதனால், குழப்பத்தில் முடிவு சொல்லாமல் மௌனம் காத்து வருகிறார் நயன்தாரா.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
306 Views

நடிகர் சூர்யா நேற்று காலை ட்விட்டரில் நுழைந்து ட்விட்டர் உலகை வலம்வர ஆரம்பித்திருக்கிறார். அவரை வரவேற்று பலரும் ட்வீட் போட்டு வருவதால் #WelcomeSuriyaToTwitter என்ற ஹாஷ்டக்கினை பயன்படுத்தி பிரபல்யப்படுத்தி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய தளபதி விஜய், தனுஷ், சிம்பு என்று பலரும் ட்விட்டரில் உள்ளனர். அவர்கள் தங்களின் படங்கள் பற்றியும், பிற நிகழ்ச்சிகள் பற்றியும் அவ்வப்போது ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் ஏதாவது சுபயோக சுபதினத்தை தேர்வு செய்து ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடுகிறார்கள். சூர்யாவோ ட்விட்டர் பக்கமே வராமல் இருந்தார். இந்நிலையில் தான் அவர் மகளிர் தினமான நேற்று காலை 11.30 மணிக்கு ட்விட்டரில் இணைந்துள்ளார். சூர்யா ட்விட்டரில் சேர உள்ளதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அவரை வரவேற்று ட்வீட் போட்டு வருகிறார்கள்.
இதனால்  ட்விட்டரில் #WelcomeSuriyaToTwitter என்ற ஹாஷ்டக்கினை தேசிய அளவில் பிரபல்யப்படுத்தி வருகின்றனர்.

மேலும் ரஜினி ட்விட்டரில் சேர்ந்த அன்று அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்ததை போன்று சூர்யா விஷயத்திலும் நடக்கும் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.

எனவே சூர்யா ட்விட்டரில் சேர்ந்தவுடன் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை கண்காணிக்க பலர் முடிவு செய்துள்ளனர்.
இதுவரைக்கும் ட்டுவிட்டரில் பின்தொடர்ந்தவர்களின் எண்ணிக்கை 60000 மாக அதிகரித்துள்ளது.

293 Views
மனோரம்மாவுக்கு பிறகு, சிறந்த குணச்சித்திர மற்று நகைச்சுவையில் வெளுத்து வாங்கும் நடிகையாக பார்க்கப்படுகின்றவர் நடிகை கோவை சரளா.

கே. பாக்கியராஜ்ஜின் முந்தானை முடிச்சு படத்தில், சிரிப்பு நடிகையாக அறிமுகமானவர்தான் இந்த கோவையை சேர்ந்த சரளா. கடைசியில் கோவையும் அவரது பெயரோடு ஒட்டிக் கொண்டது. அவரது நடிப்பும் உடல்மொழியும் இரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பெற்றுக் கொடுத்தது.

இந்நிலையில், கோவை சரளா என்னதான் சிரிக்க வைத்தாலும், குணச்சித்திர வேடங்களில் வந்து மனதை உருக வைக்கும் காட்சிகளில் இதுவரை பெரிதாக நடிக்கவில்லையே எனும் கவலை நிறையப் பேருக்கு இருக்கிறது. அந்தக் கவலைக்கு முற்றிடும் முகமாக கார்த்தி நடிப்பில் வெளிவர இருக்கும் கொம்பன் படத்தில் கார்த்தியின் அம்மாவாக ஆக்ரோஷமான காட்சிகளில் எல்லாம் சபாஷ் வாங்கியுள்ளார் சரளா.

படத்தில் இறுதிக் காட்சியில், கார்த்தியை பழிவாங்க அனுப்பும் வீர வசனங்களை பேசுபவர் இவர்தான். ''நல்லவன் சாகவும் கூடாது. தப்பானவன் வாழவும் கூடாது'' என கொதித்துப் போகும் ஒரு அம்மாவாக நடித்துள்ளார் கோவை சரளா. இதன் மூலம், அவர் இன்னும் பல அழுத்தமான படங்களை கைப்பற்றிக் கொள்ளுவார் என பலரும் பேசி வருகின்றனர்.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
326 Views
கற்றது தமிழ் எனும் படம் மூலம் தன் பயணத்தை ஆரம்பித்து, மாறுபட்ட கதைகளும் வெல்லும் என்பதை தங்கமீன்கள் மூலம் நிரூபணம் செய்தவர் இயக்குனர் ராம். தங்கமீன்கள் அள்ளிக் கொண்ட விருதுகளும் பெற்றுக் கொண்ட பாராட்டுக்களும் எண்ணிலடங்காதவை.

இப்பொழுது தரமணி எனும் படத்தை எடுத்து வருகிறார். படம் முடிவுறும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், தனது அடுத்த படத்தை ஆரம்பித்துள்ளார். ஹீரோவாக நடிக்க மம்முட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹீரோயின்கள் யாரென்று கேட்டால் அசந்து அதிர்ந்து போவீர்கள். காரணம், மம்முட்டி கொஞ்சம் முதிர்நிலை ஹீரோ. அதாவது சீனியர் ஹீரோ எனலாம். இவ்வாறு ஒரு ஹீரோவுக்கு நாயகிகளாக நடிக்க இப்போதுள்ள நடிகைகள் யாரும் விரும்ப மாட்டார்கள். இதுதான் வழமை.
                 
                         ஆனாலும், ஒருவர் என்பதையும் கடந்து இருவர் இப்படத்தில் மம்முட்டி ஜோடியாக நடிக்க இசைந்துள்ளனர். ஆண்ட்ரியா மற்றும் அஞ்சலி ஆகிய இளம் பறவைகளே இப்படத்தின் மூலமாக ஒன்றாய் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். ஆஹா, என பலரும் வியக்க, நாம இது நடக்கப்படாதே என்ற கோணத்தில் ஆராய்ந்தோம். அப்போதுதான் விஷயம் வெளியே கசிந்தது. அதாவது, அஞ்சலியின் குருநாதர் தான் ராம் (கற்றது தமிழ்). ஆண்ட்ரியாவுக்கும் தரமணி எனும் படம் மூலம் மாறுபட்ட பாத்திரத்தை வெளிப்படுத்த வாய்ப்பளித்தவர் இவர் என்பதால் தான், இருவரும் தமது நன்றிக்கடனை இப்படத்தின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். எது எப்பிடியோ? மம்முட்டிக்கு மச்சம்தான்!!

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
278 Views
சண்டமாருதம் வெளியாகி நல்ல வரவேற்பை கொடுத்துள்ளதால், மீண்டும் நடிப்பில் தன் கவனத்தை திருப்பியுள்ளார் நடிகர் சரத்குமார். ஒரு காலத்தில் கொடிகட்டிப்  பறந்த நடிகர்களில் இவரும் ஒருவர். நல்ல நடிப்பை தேர்ந்த பாத்திரங்கள் மற்றும் படங்கள் மூலமாக வெளிப்படுத்தி வந்தவர் இவர்.

பின்னர், அரசியலில் ஈடுபாடு ஏற்படவே படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். ஆனாலும், இடையிடையே காஞ்சனா போன்ற நல்ல படங்களில் நடித்தும் வந்தார். இந்நிலையில், மீண்டும் சண்டமாருதம் படத்தில் நடித்து, படம் அண்மையில் வெளியாகி முதலுக்கு மோசமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

எனவே, இப்படம் கொடுத்திருக்கும் உற்சாகத்தால், மீண்டும் புதுத் துணிவோடு தன்னை தேடி வந்த படங்களில் 5 படங்களுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளார். அவைகளில், மிஸ்கின் இயக்கும் ஒரு படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளது. அடுத்து ஏ.வெங்கடேஷ் இயக்கும் ஏய் இரண்டாம் பாகத்திலும், சமுத்திரக்கனியின் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடிக்கிறார்.
                            இதுதவிர, கே.ஆர்.செல்வராஜ் இயக்கும் விடியல், வேளச்சேரி ஆகிய படங்கள் வெளியாக தயாராகியுள்ளன. இது தவிர பிற மொழிகளான மலையாளம் மற்றும் தெலுங்கிலும் ஒவ்வொரு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் சரத்குமார்.

ஆக, 2015 சரத்குமாருக்கு இன்னும் வாய்ப்புக்களை வழங்கும் ஆண்டாக அமையும் என்பது இப்பொழுதே புரிகிறது.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
6,172 Views
"தல" ரசிகர்கள் சொல்ல விரும்புவது  என்ன.......???
-அதிரும் திரையுலகம்

தென்னிந்திய தமிழ்த்திரையுலகில் தூக்கிவிட கையின்றி, தன்னம்பிக்கையை மட்டும் கொண்டு தனக்கென்று தனியொரு இடம்பிடித்து மின்னும் ஒரே நட்சத்திரம் யாரென்றால் "தல"அஜித் மட்டும் தான்.

தடைகளையெல்லாம் முட்டிமோதி முளைத்து முழு விருட்சமாகி நிற்பவர், அந்த விருட்சத்தின் நிழல் தேடி உதவி என்று வருபவர்களுக்கு வெளியில் தெரியாமலேயே வாழ வழி செய்பவர், "அமராவதி"யில் தொடங்கி "என்னை அறிந்தால்" மூலம் தன்னை அறியவைத்தவர், திரையுலகமே வியந்து பார்க்க உயர்ந்தவர் என ரசிகர்கள் கொண்டாடும், நடிப்பை நிஜவாழ்வில் கலக்காத நல்ல மனிதர் இவர்.

இது இவ்வாறிருக்க, திரையுலகம் சார்ந்தோர் உட்பட பிரபலமானவர்கள் பற்றிச்  சொல்லவரும்போது சமூகவலைத்தளங்கள் பற்றியும் சொல்லவேண்டியது தவிர்க்க முடியாத ஒரு நிலையாகிவிட்டது என்றால் மிகையில்லை. ஏனெனில்  எந்தவொரு விடயத்திற்கும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடும், உதவியும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இது சினிமாவிலும் அதன் தாக்கத்தை செலுத்தத் தவறவில்லை என்பதே உண்மை. இந்த உண்மையை வேறு எந்த தமிழ் நடிகர்களின் தீவிர ரசிகர்களும் புரிந்துகொண்டு ஒன்றுபட்டுச் செயற்பட முன்னரே, முக்கியமாக Facebook, Twitter ஆகிய சமூகவலைத்தளங்களில் "தல"அஜித் ரசிகர்கள் தங்கள் ஆட்டத்தை ஆரம்பித்து அதிரவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
இப்போதெல்லாம் ஒரு விஷயத்தை Twitter இல் ட்ரெண்ட் பண்ணுவதிலும், அதை தக்கவைப்பதிலுமே அந்த விசயத்தின் முக்கியத்துவம் வெளிக்கொண்டுவரப்படுகின்றது என்பது பரவலான எண்ணப்பாடு. அந்த வகையில் அஜித் ரசிகர்களும் அதையே பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.

              

'தல' இன் ஆரம்பம் படத்தில் ரசிகர்கள் மெல்ல ஆரம்பித்த இந்த ஆட்டம் முழுதாக சூடு பிடித்தது எப்போதென்றால் "என்னை அறிந்தால்" மூலமாகவே. "என்னை அறிந்தால்" என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டபோது ஆகட்டும். பின்னர், படத்தின் விளம்பர முன்னோட்டக்காட்சி (டீசர்) வெளியீடு, படத்தின் இசை வெளியீடு என அத்தனை நிகழ்வுகளையும் படம் வெளியாகும்வரை ஒன்று விடாமல் Twitter இல் ட்ரெண்ட் பண்ணியிருந்தார்கள்.

இவ்வாறு டுவிட்டரில் அதகளம் பண்ண ஆரம்பித்தவர்கள் படத்தோடு மட்டும் தமது ஆட்டத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. கடந்தவாரம் பிறந்திருக்கும் ஜூனியர் 'தல' யின் வருகை, கொண்டாட்டம், அதற்கென தனியான Favebook சமூகவலைத்தளப்பக்கம் ஆரம்பித்தது என புதிது புதிதாக ட்ரெண்ட் பண்ணி தொடர்ந்து அதிரவைத்துக் கொண்டிருக்கிறார்கள் Twitter ஐ மட்டுமல்ல, ஏனைய நடிகர்களையும் சேர்த்தேதான். ஏனெனில், ஒட்டுமொத்த இந்திய திரையுலகில் எந்த ஒரு நடிகருக்குமே அவர்களது ரசிகர்கள் இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை என்று வியக்கிறது திரையுலகம்.   

           

ஏதோ ஒன்றை சொல்ல வருகின்றார்கள் தல ரசிகர்கள்.......
அது என்ன என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகின்றோம்.

*கணேசமூர்த்தி ராகவன்.

%MCEPASTEBIN%
505 Views

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம், நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு. அதன் பின்னர் இப்பொழுது ஜீவா வரைக்கும் அவரது படங்கள் இரசிகர்களுக்கு பிடித்த படங்களின் பட்டியலில் உள்ளன. எளிமையான இளம் நடிகராக எல்லோருக்கும் பிடித்தமானவர் விஷ்ணு.

இந்நிலையில், கிரிக்கெட் மீது அதிகமான பாசமும் பற்றும் கொண்டவர் இவர். கடந்த 2012இல் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது, கையில் காயமுற்றார். இதனால், அவருடைய கையில் மெட்டல் ப்ளேட் என்று சொல்லப்படும் இயந்திரம் பொருத்தப்பட்டது.

பின்னரும், அதையும் பொருட்படுத்தாமல், 2014இலும் தனது திறமையை போட்டியில் கலந்து கொண்டு நிரூபித்தார் விஷ்ணு. இப்பொழுது கடந்த இரு நாட்களுக்கு முன்பு விஷ்ணுவுக்கு கையில் வைக்கப்பட்டிருந்த இயந்திரம் அகற்றப்பட்டது. எனவே, அவர் வைத்திய சாலையில் அனுமதிப்பட்டிருந்தார்.
          இந்த விடயத்தை தெரிந்து கொண்ட தல அஜித், விஷ்ணுவை வைத்தியாசாலையில் சென்று சந்தித்து சுக நலன்களை விசாரித்து பேசியுள்ளார். அன்போடு ஆரத்தழுவி ஆறுதலும் சொல்லியுள்ளார். இதனால் மனம் நெகிழ்ந்துள்ள விஷ்ணு, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ''அஜித் இவ்வாறு வந்து என்னை பார்ப்பார் என்று நான் நம்பவில்லை. இவ்வளவு பெரிய நடிகர் இப்படி எளிமையான மனிதராக நடந்து கொள்வது ஆச்சர்யமாக இருக்கிறது'' என மகிழ்வோடு பகிர்ந்துள்ளார்.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
362 Views
இயக்குனர் விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்க ஆரம்பித்துள்ள புதிய படம் ''24''. இதற்க்கு என்ன அர்த்தம் என்பது நம்மில் பலருக்கு இன்னும் புரியவில்லை. யாராவது மௌனம் களைந்து தாங்களாக சொன்னால்தான் நமக்கெல்லாம் தெரிய வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தில் நாயகியாக நடிகை சமந்தாவையே மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். ஏற்கனவே அம்மணி சூர்யாவுடன் லிங்குசாமி இயக்கிய அஞ்சான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்பொழுது மீண்டும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது சூர்யாவின் படத்தில் அவருக்கு !

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல் பதிவு பணிகள் ஆரம்பிக்கபப்ட்டுள்ள நிலையில், சமந்தாவின் ''24'' பட பாத்திரமானது, வெறுமனே ஹீரோவோடு நடனமாடி விட்டு இல்லாமல் போகும் பாத்திரமாக அல்லாமல், நகைச்சுவையோடு பேசும் சிறப்பான வேடமாக இப்படத்தில் அமையவுள்ளது.

ஏற்கனவே, அஞ்சானில், கவர்ச்சி கதகளி ஆடிய சமந்தா, இப்படத்தில் சிரித்து சாவடிக்கவுள்ளார் போல.... !!

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
338 Views
ஜீவாவின் அண்மைய படங்கள் எதிர்பார்த்தளவுக்கு கை கொடுக்காததால், கொஞ்சம் கவலை அப்ப உலாவிய நடிகர் ஜீவா, மீண்டும் புத்துணர்வோடு எழுந்துள்ளார்.

தனது அடுத்தபடம் எப்படியும் வெற்றிப்படமாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில், மிகவும் அவதானமாக கதைகளை தேர்வு செய்துகொண்டு வந்தார். அதன்படி இயக்குனர் அட்லீயின் உதவியாளர் கொண்டு வந்த கதையை தனது அடுத்த படத்துக்காக தெரிவு செய்துள்ளார் ஜீவா.

கதை அட்லீயால் எழுதப்படாது என்றாலும் , அவரது உதவியாளர் தான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். ஜீவா மற்றும் ஸ்ரீதிவ்யா இப்படத்தில் இணைகின்றனர்.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
396 Views

எதிர்வரும் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச மகளீர் தினத்தையொட்டி, தெலுங்கு யுவா சக்தி எனும் அமைப்பு இந்தியாவின் சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்துள்ளார்கள். அந்த விழாவில் நடிகை விமலா ராமனுக்கு சாதனைப் பெண்மணி எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சந்து மெண்டொட்டி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யா, தமிழ் படமொன்றில் முதன் முறையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் இயக்குனர் நடிகர் பிரபுதேவா, தனது அடுத்த தமிழ் படத்தை எடுக்க கதை தயார் செய்து வருகிறார். இந்தப் படத்தில் கமல் அல்லது விஜய் தான் நடிப்பார்கள் என பரவலாக பேசப்படுகிறது.

வாய்ப்புக்கள் இல்லாமல் காத்திருந்த நடிகை தமன்னாவுக்கு பரத்தின் படமொன்றில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. ஆனாலும், எதையும் கேட்காமல் பரத் நாயகன் என்றதும் மறுத்துள்ளார் தமன்னா. தன்னைப் போல முன்னணி நாயகர்களோடு மட்டும்தான் ஜோடி செர்வாராம் அம்மணி.

கவர்ச்சி நடிகை சோனாவுக்கு இதுவரை ஒரே போன்ற வேடத்தில் நடித்து அலுத்து விட்டதாம். அதனால், வில்லியாக நடிக்கவே ஆசையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மூண்டு தடவைகள் தனது பெயரை மாற்றிக் கொண்ட நடிகை யார் தெரியுமா? என் ஆள பாக்க போறேன்னு பாடிய கயல் நாயகி ஆனந்தி தான். தமிழில் ஆனந்தியாக வரும் இவர், தெலுங்குப் படங்களில் ரஷிதா என்று நடிக்கிறார்.

உத்தம வில்லன் படத்தில் ஐந்து பாடல்களை எழுதி விட்டு, அதில் ஜிப்ரானின் இசையில் ஆறு பாடல்களையும் அவரே பாடியுள்ளார். அவர் யார் தெரியுமா? நம்ம உலக நாயகன் கமலஹாசன் !

இந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி என அழைக்கப்படும், கேரளாவின் அத்திரப்பல்லி எனும் நீர்வீழ்ச்சியில் புலி படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். விஜய் மற்றும் சுருதி ஹாசன் ஆகியோர் பங்குபெறும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. 

அஜித்தின் 56ஆவது படத்தில் நடிக்க ஹன்ஷிகா மற்றும் தமன்னா ஆகியோரிடையே போட்டி நிலவினாலும், ஸ்ருதி ஹாசனுக்கே வாய்ப்பு சென்றுவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது. 




-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
322 Views
தாழ் பணிந்த சிம்பு - வாழ்வு கொடுப்பாரா ரஜினி மகள் ஐஷு.....?????

கோடம்பாக்கத்தில் குழப்படிக்குக் குறைவில்லாத ஒரே நடிகர் என்றால் வாலு நடிகர் சிம்பு தான். லிட்டில் சூப்பர்ஸ்டார் என சொல்லி சுற்றித்திரிந்த இவர் சூப்பர்ஸ்டார் மகளுக்கும் நூல்விட்டு தன் காதல்வலையில் சிக்கவைத்தவர் என்றால் தப்பில்லை.

வாலுத்தனத்துக்குக் குறைவில்லாத இந்த மன்மதன் தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகைகளை எப்படியாவது தன் காதல்வலையில் சிக்க வைப்பதில் செம கில்லாடி. முதலில் சூப்பர்ஸ்டார் ரஜினியின்மகள் ஐஸ்வர்யா, பின்னர் நயன்தாரா, அவரைத் தொடர்ந்து ஹன்சிகா என இவருடைய பட்டியலில் நடிகைகளின் பெயர்கள் தொடர்கின்றன. இவ்வாறு சிக்குவது நடிகையானாலும் இறுதியில் அவஸ்தைப்படுவதும், வருந்துவதும், தன்னுடைய பெயரைக் கெடுத்துக்கொள்வதும் என்னமோ இவர்தான்.



நடிகைகளிடம் தன் பெயரைக் கெடுத்துக்கொண்டதோடு மட்டும் நிறுத்தவில்லை இந்த விரல்வித்தை மன்மதன். படப்பிடிப்பு தளங்களிலும் படக்குழுவினருக்கு சரியாக ஒத்துழைப்புத் தருவதில்லையாம். படப்பிடிப்பு தருணங்களில் சரியான நேரத்திற்கு வருவதில்லை, தயாரிப்பாளர்களுடன் முரண்பாடு என தமிழ்த்திரையுலகில் தன் பெயரைத்தானே கெடுத்துக்கொண்ட பெருமை பெற்றவரும் இவரே.

இந்தநிலையில், சிம்புவை வைத்து எந்த தயாரிப்பாளர்களும் படம் எடுக்க முன்வராததால் இரண்டு வருடங்களாக இவரின் நடிப்பில் எந்தவொரு படமும் வெளிவராத நிலையில், நீண்ட இழுபறிகளுக்கு மத்தியில் இந்த மாதமளவில் வெளியாகவுள்ளன வாலு மற்றும் இது நம்ம ஆளு ஆகிய படங்கள். இப்படி வெளிவரவுள்ள படங்களையும் வெளியிடுவதில் உள்ள சில சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, படங்களை வாங்கி வெளியிடும் நிறுவனமான ஈரோஸ் நிறுவனத்திடம் நேரில் சென்று தன் படங்களை வாங்கி வெளியிடுமாறு கேட்டிருக்கிறாராம் சிம்பு. இந்த ஈரோஸ் நிறுவனத்தின் தென்னிந்திய சென்னை கிளைக்கு தற்போது பொறுப்பேற்றிருப்பவர் யாரென்று பார்த்தால் இந்த சிம்புவின் முன்னாள் காதலி ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் தான். இந்த நிலையில் அக்காவிற்கு தங்கை எதிர்மாறாக இருக்கவா போகிறார்...? என தமக்குள் வினவிக்கொள்கின்றார்களாம் தமிழ்த்திரையுலகினர். 

                  

இது இப்படியிருக்க, சிம்புவின் மீதுள்ள கோபத்தினால் அவரை சினிமாவில் கீழ்நிலைக்கு கொண்டுவரவே தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனை சினிமாவில் முன்னிறுத்தி அவர்களை மேலே கொண்டுவர ஐஸ்வர்யா முயற்சிப்பதாக செய்திகள் பரவலாக வெளியாகியிருந்தன. இந்தநிலையிலேயே தன்மானத்தை அடகுவைக்கும் சிம்புவின் இந்த அடிபணிதல் இடம்பெற்றிருக்கின்றதாம். அதுமட்டுமல்லாமல் அடுத்து, தான் நடிக்கவிருக்கும் படத்தை ஈரோஸ் நிறுவனம் சார்பாக நீங்களே தயாரிக்க வேண்டும் என
சௌந்தர்யாவிடம் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருக்கிறாராம் இந்த வாலு மன்மதன்.

இவ்வாறு தன் நிலையிலிருந்து இறங்கிக் சென்ற சிம்பு, சௌந்தர்யாவிடம் அபயம் கேட்டதனால் தங்கையின் சிபாரிசிற்கு     செவிசாய்த்து மன்னிப்பாரா ஐஸ்வர்யா என்ற கேள்விகள் கோடம்பாக்கத்தில் வலுக்கின்றன. ..?

சரண் புகுந்தார் சிம்பு.... அபயம் அளிப்பாரா ஐஷு.....??? - கேள்வியுடன் கோடம்பாக்கம்.

*கணேசமூர்த்தி ராகவன்.
47,336 Views
[1]      «      1717   |   1718   |   1719      »      [1754]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top