இந்தியா ,பங்களாதேஸ் கிரிக்கெட் தொடர் ரத்தாகிறது...?உலக கிண்ணப் போட்டியின் காலிறுதி போட்டியில் பங்கெடுத்த பங்களாதேஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது ரோஹித் சர்மா ஆட்டமிழந்த பந்து முறையற்ற பந்து என்று கள நடுவர்களால் அப்போது அறிவிக்கபட்டது.
இந்த ஆட்டமிழப்பு பெரும் சர்சையை உண்டுபண்ணியது.
இதனால் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக இருந்த பங்களாதேஸ் நாட்டை சேர்ந்த முஸ்தபா கமால் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டு ICC யின் உயர்மட்ட கூட்டத்தில் இந்தியாவை சேர்ந்த ஸ்ரீநிவாசன் மீதும் ICC மீதும் தன் குற்ற சாட்டுக்களை முன்வைத்தார்.
பின்னர் உலக கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் வெற்றிபெறுகின்ற அணிக்கு யார் கிண்ணத்தை வழங்குவது எனும் முரண்பாட்டில் இந்தியாவை சேர்ந்த ஸ்ரீனிவாசனுடன் முரண்பட்டு அதிலே அதிருப்தியுற்று தனது பதவியையும் தூக்கி எறிந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீனிவாசனது செயற்பாடுகளே தன்னுடைய பதவி விலகலுக்கும் காரணம் என்று அறிக்கை விட்டார்.
இதன் காரணத்தால் இரு நாட்டு கிரிக்கெட் சபைகளுக்குமிடையில் இயல்பற்ற நிலைமை உருவானதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் சபை கூடி எதிர்வரும் நாட்களில் பங்களாதேஸ் தொடர் குறித்து தீர்மானம் எடுக்கவுள்ளது.
இதனால் 2 டெஸ்ட் ,3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் ஜூலையில் பங்களாதேசில் இடம்பெறவிருந்த நிலையில் இது ரத்தாகும் வாய்ப்பிருப்பதாக அறியக் கிடைக்கிறது.
*T.T