3,868 Views
மிஹிர உவிந்து விஜேராம என்ற வயதான மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் களுத்தறை பலாத்தொட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவர் விடுதி 16 மாடிகளைக் கொண்டதெனவும் , மிஹிர 12 ஆம் மாடியில் தங்கியிருந்ததாகவும் , கட்டிடத்தின் 7 ஆம் மாடியிலேயே தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குழப்பமடைந்த மாணவர்கள் கட்டிடத்தில் இருந்து வெளியேற முயன்றுள்ளனர். இதில் 40 மாணவர்கள் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் 9 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளதுடன் மிஹிரவும் அதில் ஒருவர் எனத் தெரியவருகின்றது.
இவ்வாறு தீக்காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மிஹிர உவிந்து விஜேராம கடந்த மாதம் 28 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
அவரின் மரணத்துக்கான காரணம் காயங்கள் மட்டுமன்றி விபத்தில் போது வெளியான காபன்மொனொக்சைட் வாயு தாக்கியமையுமென தெரிவிக்கப்படுகின்றது.