ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்கள் தங்களது கணக்கு மிகுதியை இன்று முதல் உடனடியாக அறிந்துகொள்ள முடியும்.
இதற்காக தானியங்கி இயந்திரமொன்று தொழிற்செயலகத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
தானியங்கி இயந்திரத்தில் தொழிலாளர்கள் தங்களது கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வதன் மூலம் தமது கணக்கு மீதியை அறிந்துகொள்ள முடியும்.
இதுதவிர தமது தொழில் வழங்குனரால் தமக்கான ஊழியர் சேமலாப நிதிய கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதா? என்பதையும் அறிந்துகொள்ளமுடியும்.
இலத்திரனியல் முறைமைக்கு பதிவு செய்துள்ள அனைத்து ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்கள் தமது கணக்குகளை பரிசோதனை செய்துகொள்ளமுடியும். இம்முறைக்கு பதிசெய்யாதவர்கள் அம்முறைக்கு பதிவு செய்வதன் மூலம் இச்சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.