முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி பாதுகாப்பு படையணி கடந்த 30ஆம் திகதியில் இருந்து கலைக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
நிர்வாக தேவையின் நிமிர்த்தம் இராஜாங்க அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, அதில் இணைந்திருந்த இராணுவ வீரர்கள் அவர்களது வழமையான பணிகளுக்கு திரும்பி அனுப்பட்டுள்ளனர்.
எனினும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு வழமைப்போலவே பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார்.