காஷ்மீர் - புல்வாமா மீது, பாகிஸ்தான் படையினர் தாக்குதல் மேற்கொண்டதை அடுத்து, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான முறுகல் முற்றியது.
எனினும் நல்லெண்ண அடிப்படையில், தம்மால் தடுத்து வைக்கப்பப்பட்டுள்ள இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்கப் போவதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தமது நாட்டு நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்தார்.
இவரது அறிவிப்பை அடுத்து, உலக நாடுகள் பல, பாகிஸ்தானின் தீர்மானம் குறித்து தமது வரவேற்பை தெரிவித்திருந்தன.
அதன்படி பாகிஸ்தான், இந்திய விமானி அபிநந்தனை பாதுகாப்பாக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.
இதனை அடுத்து இந்தியர்கள் பலர் ஒன்று திரண்டு, விமானி அபிநந்தனை போற்றிக் கொண்டாடி வருகின்றனர். அத்துடன் விமானி அபிநந்தனின் உருவப்படங்களை இந்தியர்கள் அழகாக வடிவமைத்து, தமது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த படங்களுக்கு தற்போது பலத்த வரவேற்பு கிடைத்து வருகின்றது.