உடற்பயிற்சியின் போது நாம் கவனிக்க வேண்டியது நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்பதே..இதனை தாண்டி உடல் மெலியும் அதிகரிக்கும் என்று எண்ணுதல் கூடாது.காரணம் நம் சிந்தனை நடக்காமல்போகுமிடத்து மனரீதியில் நாம் மன உளைச்சலுக்கு உள்ளாகலாம்.இதனால் நம் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
உடற்பயிற்சியானது 90 நிமிடங்கள் செய்தால் போதுமானது.
உடற்பயிற்சியின் பின்னர் காலை உணவாக பாசிப்பயறு கௌபி ஓட்ஸ் சாப்பிடுதல் நன்று.
மாலை வேளையில் அதிக நீர் பருகுதல் நன்று.கொழுப்பு உணவுகளை உண்பதை தவிர்த்து பழங்களை உண்ணலாம்.
பகல் உணவில் அதிக காய்கறிகளை சேர்த்துக்கொள்ளுதல் சிறப்பானது.
இரவு உணவாக குரக்கன் மா பயன்படுத்திய உணவை சாப்பிடுதல் நன்று. சாப்பிட்ட பின்பு எப்போதும் உடற்பயிற்சி செய்யக்கூடாது