பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் முதன் முறையாக இந்து பெண் ஒருவர் உரையாற்றும் வரலாற்று நிகழ்வு மகளிர் தினமான நேற்று நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள சிந்து மாகாணாத்தில் நடைபெற்ற தேர்தலில் தெரிவாகிய 39 வயதுடைய கிருஷ்ண குமாரி கோல்ஹி என்ற பெண்ணே, இந்த சிறப்பிற்கு உரியவர் ஆவர்.
இவர் தேர்தலில் வெற்றி பெற்றதன் காரணமாக பாகிஸ்தானிய நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெறும் வாய்ப்பை பெற்றுள்ளமை அனைவராலும் பெருமையாக பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், நாடாளுமன்ற மேல்சபையில் கிருஷ்ண குமாரி கோல்ஹி உரையாற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.