இளைஞர்களின் மனதில் தனித்துவமனான இடம் பிடித்த நடிகை ஓவியா, அண்மையில் 90 ml திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பலரின் வெறுப்பை சம்பாதித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் வரும் காட்சிகளை பார்ப்பதன் மூலம் சிறுவர்கள் முதல் மாணவர்கள் அனைவரும் தவறான பாதியில் செல்வதற்கான வாய்ப்பு உள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் நடிகை ஓவியா மீது, ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவேற்காட்டை சேர்ந்த தமிழ்வேந்தன் என்பவர் மேற்படி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஓவியாவின் 90 ml திரைப்படம் அருவருக்கத்தக்க வகையில் உள்ளதாகவும், தமிழக கலாசாரத்தை சீர்குலைக்கும் விதமாகவும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்த படத்தை இயக்கிய அனிதா உதீப் உட்பட, படத்தில் நடித்த ஓவியா மற்றும் அவருடன் நடித்த துணை நடிகர்களை உடன் கைது செய்ய வேண்டும் என அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.