தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகையுமான ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து, அவரது மரணம் குறித்த சர்ச்சைகள் தீவிரமாக எழுந்தன.
இது ஒருபுறமிருக்க மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக்குவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், படத்திற்கான நாயகியாக பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் ஒப்பந்தமானார்.
இந்த நிலையில் படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு, 24 கோடி இந்திய ரூபாய்களை வழங்க, படக்குழு முடிவு செய்துள்ளதாக, செய்திகள் வெளிவந்துள்ளன.
தென்னிந்திய திரைப்படம் ஒன்றில் நடிக்க எந்த நடிகைக்கும், இந்தளவு சம்பளம் வழங்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.