தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் ஐஸ்வர்யா தத்தா. அதுமட்டும் அல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் .
தற்பொழுது அலேகா திரைப்படத்தை ஒரு புதுமுக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமித்திரன் இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக ஆரி நடிக்கிறார் இந்த நிலையில் திரைப்பட குழுவினர் திரைப்படத்தின் முதல் பார்வையினை வெளியிட்ட போது பல்வேறு சர்ச்சைகளும் ஏற்பட்டு இருந்தது .
இந்த நிலையில் படப்பிடிப்புக்கு தினமும் ஐஸ்வர்யா தத்தா தாமதமாக வருவதாகவும் அவருக்காக மற்றைய நடிகர்களும் தொழிநுட்ப பிரிவினரும் அதிக நேரம் காத்திருப்பதாகவும் . இந்த நிலை தொடர்வதால் இயக்குனர் பொறுமை இழந்து அவரை கண்டித்து இருக்கின்றார் இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது