புலி,சிங்கம்,பூனை,நாய் போன்ற மாமிசம் உண்ணும் விலங்கிற்கும் பசு,ஆடு,மாடு போன்ற தாவரம் உண்ணும் விலங்கிற்கும் இடையில் உடலமைப்பில் வேறுபாடு உள்ளது.
மனிதனின் உடலமைப்பை ஆராய்ந்து பார்த்தால்,தாவர உண்ணும் விலங்குகளின் உடலமைப்போடு மட்டுமே ஒத்து போகிறது. அசைவ உணவுஉண்ணும் விலங்குகளுக்கு தட்டையான கடைவாய் பற்கள் இல்லை. ஆனால் தாவர உணவு உண்ணும் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் தாவர உணவை அரைத்து உண்ண வசதியாக தட்டையான கடைவாய் பற்கள் உண்டு. அசைவ உணவை உண்ணும் விலங்குகளுக்கு இரையை பிடிக்க, கிழிக்க கூரியநகங்களும், வாயில் கோரைப்பற்களும் உள்ளன. ஆனால் மனிதனுக்கு இந்த உடலமைப்பு இல்லை.
அசைவ உணவு உண்ணும் விலங்குகள் தங்களுடைய நீண்ட நாக்குகளை நீட்டி நக்கி தண்ணீர் குடிக்கின்றன. ஆனால் தாவர உணவை உண்ணும் விலங்குகளும், மனிதர்களும் உதடுகளால் உறிஞ்சு குடிக்கின்றனர். அசைவ உணவை உண்ணும் விலங்குகள் உடலை குளிரச் செய்ய நாக்கை தொங்கவிட்டவாறு வேகமாக சுவாசிக்கின்றன. தாவரஉணவு உண்ணும் விலங்குகள் மற்றும் மனிதர்கள் உடலை குளிரச்செய்ய தோலில் உள்ள கோடிக்கணக்கான வியர்வை துவாரங்கள் வழியே வியர்வையை வெளியேற்றுகின்றன.
குடல்அமைப்பு, சிறுநீரகம், கல்லீரல் அமைந்த விதம் அனைத்து தாவரஉணவை உண்ணும் வகையில் மனிதர்களுக்கு உள்ளது. எனவே மனிதன் தாவர உண்ணிதான் என்பது தெளிவாக தெரிகிறது.