1999ல் வாலி படத்தில் ஒரு சிறிய காட்சியில் அறிமுகமாகிய ஜோதிகா, குறுகிய காலத்தில் பலரின் மனதில் இடம் பிடித்தவர், இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட். பேரழகன் , மொழி, சந்திரமுகி போன்ற திரைப்படங்களுக்காக விருதுகளும் பெற்றிருக்கிறார்.
2006ம் ஆண்டு நடிகர் சூரியாவை காதல் திருமணம் செய்து கொண்ட இவர் இப்போது இரு குழந்தைகளின் தாய், குடும்ப வாழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட இவர் சினிமாவில் தலைகாட்டவில்லை.
இறுதியாக ஜோ நடித்து தமிழில் வெளிவந்த திரைப்படம் மணிகண்டா (2007).
அதன் பின்னர் 2008இல் நடிகை ஜோதிகாவாகவே ஹீரோவா சீரோவா என்ற விழிப்புணர்ச்சி குறும்படத்தில் நடித்திருந்தார்.
இது இவ்வாறிருக்க ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் ஆகும் படத்தின் மூலம் சினிமாவிற்கு மறுபிரவேசம் செய்ய உள்ளதாக உத்தியோக பூர்வமாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
‘How old are you’ எனும் திரைப்படம் தான் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது, இப்படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகை மஞ்சு வாரியார் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதே கதாபாத்திரத்தில் 7 வருடங்களுக்கு பின் ஜோதிகா நடிக்கவிருக்கிறார்.
இவ் ஏழு ஆண்டுகளுக்குள் எத்தனையோ இயக்குனர்கள் ஜோ வை நடிக்க வைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. ஆனால் பெண்களின் உரிமை தொடர்பில் அமைந்துள்ள இந்த கதை ஜோவிற்கு மிகவும் பிடித்து போக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ம்ம்ம்...ஜோதிகாவை மீண்டும் திரையில் காண்பது அவரின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
ஜோ ஜோ ஜோதிகா <3