பல சினிமா பிரபலங்கள் தங்களுக்கென முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அதில் புகைப்படங்கள்,தங்களுடைய அக்கருத்துக்கள் உள்ளிட்ட விடயங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில்,இத்தகைய பிரபலமானவர்களின் சமூக வலைத்தளங்களை மர்ம நபர்கள் ஊடுருவி முடக்கும் சம்பவங்கள் தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், நடிகை யாமி கௌதமின் வலைத்தள கணக்கும் தற்போது மர்ம நபர்களால் ஊடுருவி முடக்கப்பட்டுள்ளது. யாமி கௌதம் தமிழில் கௌரவம், தமிழ் செல்வியும் தனியார் அஞ்சலும் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தியிலும் அதிக திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
யாமி கௌதமை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் யாமி கௌதம் டுவிட்டரில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.