இந்தப் புத்தாண்டு காலத்தில் வீட்டில் நிறைய இனிப்புப் பண்டங்கள் செய்வோம். அந்தவகையில் இலகுவாக செய்யக்கூடிய தேன் குழல் முறுக்கு எவ்வாறு செய்வதென்று இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 1/4 கிலோ
உளுந்து – 600 கிராம்
தே.எண்ணெய் – 3 ஸ்பூன்
வெண்ணெய் – 1 ஸ்பூன்
எப்படிச் செய்வது?
முதலில் பச்சரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு 4 அல்லது 5 தடவை தண்ணீர் ஊற்றி களைந்து கொள்ளுங்கள்.இதனை ஓலைக் கூடையில் போட்டு தண்ணீரை நன்கு வடிக்கட்டிக் கொள்ளுங்கள்.
இப்போது ஈரப்பதமுள்ள பச்சரிசியை ஒரு வேஷ்டியில் போட்டு 4 நாட்கள் நிழலில் உலர்திக் கொள்ளுங்கள்.தினமும் கிளறி விட்டுக் கொள்ளுங்கள். பாத்திரத்தில் 2 கைப்பிடி உளுந்தை போட்டு, மிதமான தீயில் வறுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக முழு உளுந்தையும் வறுத்துக் கொள்ளுங்கள் . மொறுமொறு பதத்தில் உளுந்து இருக்க வேண்டும்.
வறுத்த உளுந்து, காய்ந்த அரிசி இரண்டையும் அரைத்துக் கொடுத்து அரைத்து கொள்ளுங்கள்.
அரைத்த பின்னர் மாவுடன், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.
இப்போது தே.எண்ணெய் ஊற்றி , வெண்ணையையும் சேர்த்து பிசைந்துக் கொள்ளுங்கள்.
அதன் பின்னர் , ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்ரிக் கொள்ளுங்கள்.எண்ணெய் காய்ந்ததும், முறுக்கு கட்டையில் தேன்குழல் அச்சினை போட்டு , அதில் மாவையிட்டு கொஞ்சம், கொஞ்சமாக எண்ணெயில் பிழிந்துக் கொள்ளுங்கள்.
இப்போது சுவையான தேன் குழல் முறுக்கு தயார்