இசைத்துறையில் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான 'இசைஞானி' இளையராஜா, தமிழ் இரசிகர்களால் தற்போது வரை இசைக் கடவுளாகக் கொண்டாடப்பட்டு வருகிறார்.
சினிமாவில் 1,500 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள 'இசைஞானி' இளையராஜாவின் முதல் திரைப்படமான 'அன்னக்கிளி' வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்த அரை நூற்றாண்டுப் பயணத்தைப் பற்றி 'இசைஞானி' இளையராஜா கூறுகையில், "உங்களுக்குத்தான் 50 வருடம் எனக்கு அப்படி ஒன்றும் இல்லை. நான் எங்கிருந்து வந்தேனோ அங்கேதான் இருக்கிறேன். இசையமைக்கும் போது எனக்கு எந்த நினைவும் இருக்காது. மன அமைதியைக் கொண்டு வருவதுதான் இசை. பல பயிற்சிகளுக்குப் பிறகுதான் 'அன்னக்கிளி' பாடல்கள் எனக்கு வந்தன. கோயில்களுக்குப் போவதை விட இசைதான் எனக்குப் புனிதமான விடயம். நான் இல்லாவிட்டாலும் என் இசை என்றென்றும் வாழும்." என்று இரசிகர்களுடன் தன் நினைவுகளைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார்.