நடிகர்கள் ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், நடிகைகள் மஞ்சு லட்சுமி, ப்ரணிதா சுபாஷ், நிதி அகர்வால் உள்ளிட்ட 29 பேர் மீது இணையதள சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தொழிலதிபர் பஹனிந்த்ரா ஷர்மா என்பவர் மீது அமலாக்கத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர், தனது செயலியின் பயனர்களை தவறாக வழிநடத்திய குற்றத்திற்காகவும், இதனால் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அந்தவகையில் குறித்த செயலியை விளம்பரம் செய்த குற்றத்திற்காக குறித்த நடிகர்கள் மீதும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா இது குறித்து விளக்கம் அளித்த போது அது சட்டத்திற்கு புறம்பான சூதாடும் செயலி இல்லை என்றும், திறணை வைத்து விளையாடும் செயலி என்றும் தெரிவித்துள்ளார்.