2025 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செப்டம்பர் ஒன்பதாம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சம்பியன் அணியான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமான் , ஹொங் கொங் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கின்றன.
இந்த நிலையில் இந்தத் தொடரில் இந்திய அணிதான் வெற்றி பெறும் என முன்னாள் இந்திய அணியின் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஐபிஎல் தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றுக்கு பின்னர் தற்போது இந்திய அணி வீரர்கள் ஓய்வில் இருக்கின்றனர்.
இந்த ஓய்வு இந்திய வீரர்களுக்கு பல விடயங்களைத் தரும். இந்திய அணி தான் இருப்பதிலேயே அந்தத் தொடரில் பலமாக இருக்கின்றது. என்னை பொறுத்தவரை இம்முறை இந்தியா தான் ஆசியக் கிண்ணத்தை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.
துபாயில் உள்ள ஆடுகளங்களில் இந்தியாவை வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான விடயமாக இருக்கும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.