34-வது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடம்பெறவுள்ளது. இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டும் இடம் பெற்றுள்ளது.
128 ஆண்டுக்குப் பின்னர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதால், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்தும் T20 வடிவில் நடத்தப்படவுள்ளது.
இதையொட்டி லொஸ்ஏஞ்சல்சில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் பேர்கிரவுண்ட்ஸ் என்ற இடத்தில் தற்காலிமாக கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படுகிறது.
இந்நிலையில் இதன்போது நடைபெற உள்ள கிரிக்கெட்டில் 6 அணிகள் பங்கேற்கும் என்று ஐ.சி.சி அறிவித்துள்ளது.
மேலும் ஐ.சி.சி. T20 தரவரிசையில் இடம்பிடித்துள்ள முதல் 6 அணிகளுக்கு பதிலாக, ஒரு கண்டத்திற்கு ஒரு அணியை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.