கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, புலி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'மேக்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார்.
சுதீப் மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இது சுதீப்பின் 47ஆவது திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு 'மார்க்' என்ற Title வைக்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ‘மார்க்’ படத்தின் Teaser சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் திரைப்படக்குழு, ‘மார்க்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.