'கோச்சடையான்’ திரைப்படம் வெளியீட்டுக்காக பெறப்பட்ட ரூ.10 கோடி (இந்திய பெறுமதி) கடன் தொடர்பான காசோலை மோசடி வழக்கில், படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோஹருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது
இந்த கடனுக்காக வழங்கப்பட்ட காசோலை பணமாக்கும்போது திரும்பியதைத் தொடர்ந்து, கடன் வழங்கிய தரப்பு இந்த வழக்கை தாக்கல் செய்தது.
தயாரிப்பாளர் முரளி மனோகர் ரூ.2.52 கோடியை (இந்திய பெறுமதி ) நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் செலுத்தத் தவறினால், தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.