ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான 'கருப்பு' திரைப்படம் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாகக் கொண்டு, அதனுடன் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்திற்கு சாய் அபயங்கரின் இசை பெரும் பலமாக அமைந்துள்ளதாக இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திரைப்படத்தின் வசூல் விபரம் வெளியாகியுள்ளது.
அதன்படி 'கருப்பு' திரைப்படம் மூன்று நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில் ரூ.147 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், எதிர்வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.