67 Views
பாத வலி ஏற்படுவதற்கு நீண்ட நேரம் நிற்பது , முறையற்ற காலணிகள் அணிவது, அல்லது உடல் பருமன் காரணமாக பாதத்தின் தசைநார்களில் அழுத்தம் அதிகரிப்பது ஆகியவை முக்கிய காரணங்களாகும்.
இதனை குறைப்பதற்கு முடிந்தவரை நிற்பதையோ அல்லது அதிக தூரம் நடப்பதையோ தவிர்த்து பாதங்களுக்கு ஓய்வு கொடுப்பதால் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
வீக்கம் மற்றும் தசைப்பிடிப்பு இருந்தால், ஐஸ் கட்டியை மெல்லிய துணியில் சுற்றி 15 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்கலாம். அதிக நேரமான வலி அல்லது நரம்பு வலியாக இருந்தால் வெந்நீர் ஒத்தடம் சிறந்தது.
அல்லது ஒரு அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, அதனுடன் ஒரு கைப்பிடி கல் உப்பு சேர்த்து, 10-15 நிமிடங்கள் கால்களை ஊற வைக்கவும். இது வலி மற்றும் சோர்வை நீக்கும்.
நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி, பாதங்களை மெதுவாக மசாஜ் செய்யவும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து வலியைக் குறைக்கும்.