2027 ஆம் ஆண்டு IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக யார் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விகள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் எதிர்வரும் தொடரில் புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பும்ரா அல்லது திலக் வர்மா தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஹர்த்திக் பாண்டியா மும்பை அணியை வழிநடத்தி வந்த நிலையில் அவர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள IPL தொடரில் மற்றைய அணிகளில் ஒன்றால் உள்வாங்கப்படலாம் என்ற செய்தி முன்னதாக வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.