செல்ஃபி எடுப்பதென்பது இப்போதைய புதிய trend. இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, எங்கு பார்த்தாலும் செல்ஃபி, செல்ஃபி, செல்ஃபி!
இப்படி அடிக்கடி செல்ஃபி எடுப்பவர்களுக்கு மனோரீதியான பிரச்சினை உள்ளது என கூறியும், அதை யாரும் கவனிப்பதைப் போன்று தெரியவில்லை. இவரும் அப்படித்தான் போலிருக்கிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த 47 வயதான, ஜெரால்ட் டோனாவர் என்பருக்கு, டுபாயிலுள்ள உலகின் உயர்ந்த கட்டிடமான புர்ஜி கலிபாவின் உச்சியிலிருந்து செல்ஃபி எடுக்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை. அதை அவர் நிறைவேற்றிக் கொண்டுள்ளார். 2,723 அடி உயரமுள்ள இந்த கட்டிடத்தின் உச்சிக்கு சென்று செல்ஃபி எடுத்துள்ளார். இந்த செல்ஃபியில் டுபாயின் பல கட்டிடங்கள் தெரியும் வண்ணம் உள்ளது.
இது தான் உலகின் மிக உயரமான இடத்தில் எடுக்கப்பட்ட செல்ஃபி என்பது குறிப்பிடத்தக்கது.