மாலைதீவுக்கு தண்ணீர் அனுப்பியது இந்தியா!
India send water to Maldives to help with shortage crisis - மாலைதீவுக்கு தண்ணீர் அனுப்பியது இந்தியா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
மாலைதீவுக்கு தண்ணீர் அனுப்பியது இந்தியா!இந்தியா விஞ்ஞானிகளின் வெற்றிகரமான மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரக ஆராட்சிக்காக 450 கோடி ரூபா செலவில் தயாரிக்கப்பட்டு செவ்வாய் கிரகத்துக்கு சென்று விண்ணில் தனது ஆராட்சி பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில் இப்போது மண்ணில் ஒரு மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுத்து பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
மாலைதீவில் கடல் நீரை குடிநீராக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக அங்கு குடிநீர் இன்றி மக்கள் தவித்து வந்தனர். இந்த நிலையில் இந்திய கடற்படை கப்பல் மற்றும் விமான படை விமானம் மூலம் ஆயிரம் tonnes குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான கடற்படை கப்பல் மூலம் இந்த குடிநீர் மும்பையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கிறதா என்று ஆராட்சி பணிகளை ஆரம்பித்துள்ள இந்தியா இப்போது இவ்வாறான மனிதாபிமான பணிகள் மூலமும் உலகளவில் பேசப்படுகின்றது.
*T.T