இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், பிரகாசமான அலையை ஏற்படுத்தி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமனம் பெற்றுள்ள கலாநிதி ரொஹன் பெரேராவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பான் கீ மூன் இதனைக் கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையுடனும் ஏனைய சர்வதேச நாடுகளுடன் நல்லுறவை பேணி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கையின் முக்கிய செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.