Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

அறிமுகமாகி பல வருடங்கள் கடந்திருந்தாலும், லட்சுமி ராயால் இன்னும் தமிழில் ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அந்த முன்னணி இடத்துக்காக போராடுகிற லட்சுமிராய் எனும் இப்போதைய லட்சுமி ராய்க்கு, அஜித்தோடு மங்காத்தா லோரன்ஸோடு காஞ்சனா போன்ற படங்கள் அதிகப்படியான வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தன. 
கொஞ்சமாய் முன்னேறினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்பொழுது தமிழில் அரண்மனை, இரும்புக் குதிரை போன்ற படங்களிலும், தெலுங்கு மலையாளம் கன்னடப் படங்கள் சிலவற்றிலும் நடித்து வரும் நம்ம லட்சுமிக்கு, விபரீதமான ஆசையொன்று அரும்பியிருக்கிறது. 

   அவதார் படத்தினை எடுத்து உலகத்து புது சினிமா வழி காட்டிய இயக்குனர் ஜேம்ஸ் கமரூன் இயக்கத்தில் தனக்கு நடிக்க ஆசையாக உள்ளது என்றும், அவரது படத்திலென்றால் ஆடைகளை தியாகம் செய்தும் (ஒஹ்.....) நடிக்க தயார் என்று பகிரங்கமாக கூவியிருக்கிறார். 

கமரூன் இயக்கத்தில் எப்போது நடிக்க வாய்ப்பு வருமென காத்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார் லட்சுமி ராய்
அடடா !! 
என்னம்மா? என்னாச்சு புள்ளைக்கு?

406 Views
தங்கள் பணத்தின் செழிப்பை பல்வேறு விதமாக பகட்டாகக் காட்டிக் கொள்ளும் பலரை உலகில் பார்த்து வருகிறோம்.
கடந்த வருடம் இந்தியரான டட்டா புகே (Datta Phuge) 3 கிலோ எடைகொண்ட $250,000​ பெறுமதியான தங்க உடை அணிந்து உலகை வாய் பிளக்க வைத்திருந்தார். (உனக்கெல்லாம் இந்த பில்ட் அப் தேவையா என்ற கவுண்டர் வொயிஸ் தூரத்தில் கேட்கிறது)





இப்போது இன்னொரு இந்தியர் உலகத்தை தன் பக்கம் பார்க்கச் செய்திருக்கிறார்.
அதாவது தனது சட்டைப் பக்கம்...
பங்கஜ் பரா (Pankaj Parakh​) என்ற மும்பாய் பணக்காரத் தொழிலதிபர் இன்று தனது 45வது பிறந்தநாளுக்காக 4 கிலோ எடையில் ​​தங்கத்தால் செய்த சட்டதி அணிந்து கலக்கி இருக்கிறார்.





ஆடை தொழிற்துறையில் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் பங்கஜ் ஆரம்பக் கல்வியுடன் படிப்பை நிறுத்திக் கொண்டவர்.
தனது 45வது பிறந்தநாளைக் கொண்டாடும் நோக்கில், சித்தி விநாயகர் ஆலயத்துக்கு நேர்த்தி ஒன்றை நிறைவேற்றவே இப்படி தங்கத்தினால் ஆடை அணிந்து வலம்வந்து கலக்கி இருக்கிறார்.

கோடி பணம் கொட்டி இருந்தால் என்ன தான் செய்ய முடியாது?​

இதோ தங்கச் சட்டைக் காணொளி 

831 Views
இன்று மன்செஸ்டர் - Old Trafford மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள 4வது டெஸ்ட் போட்டியில் விளையாட முன்னர், மன்செஸ்டரில் உள்ள Manchester Unitedஇன் மைதானத்துக்கு இந்திய அணி விஜயம் செய்துள்ளது.
 
இது பற்றிய செய்தியையும் புகைப்படத்தையும் Manchester United உத்தியோகபூர்வ Facebook பக்கம் பதிந்துள்ளது.

 
கடந்த மாதம் இலங்கை அணியின் வீரர்களும் மன்செஸ்டர் யுனைட்டட்டின் ரசிகரான மஹேல ஜெயவர்த்தனவும் இங்கே விஜயம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மஹெலவின் டெஸ்ட் ஒய்வு செய்தியையும் தங்கள் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் செய்தியாக வெளியிட்டு கௌரவித்தது.





3,233 Views

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பயணிகள் சேர்ந்து ரயில் ஒன்றை அசைத்து சிக்கிக்கொண்ட பயணி ஒருவரைக் காப்பாற்றிய சம்பவம் உலகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் அமைந்துள்ள ரயில் நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரயிலில் இருந்து இறங்கும் பயணி ஒருவரின் கால் ரயில் மற்றும் ரயில்மேடைக்கும் இடையில் உள்ள சிறிய இடைவெளியில் சிக்கிக்கொண்டது.



15 சென்டி மீட்டர் அளவுள்ள சிறு இடைவெளியிலே சிக்கியதால், அவரால் காலை வெளியில் எடுக்க முடியாமல்போக, அங்கிருந்த பயணிகள் உடனடியாக, ஒற்றுமையாக செயற்பட்டு ரயிலை அசைத்து அவரை காப்பாற்றியுள்ளனர்.



10,000 தொன் நிறையுடைய ரயிலை இத்தனை பேர் சேர்ந்து அசைத்தமை தனக்கு ஆச்சரியமளிப்பதாக ரயில் நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றுமையே பலம் என்று சும்மாவா சொன்னார்கள்?>

 
6,277 Views
நாம் வாழும் சமூகத்தில் நடக்கபோகும் விடயங்களை எண்ணி அழுபவர்கள் அதிகம் இருக்கின்றனர், ஒரு வேளை அது நடக்காவிடில் அழுதது கூட வீணாகி விடும். சாகும் நாளை எண்ணிக்கொண்டிருந்தால் வாழும் நாள் நரகமாகிவிடும் என்று பலர் கூறுவதை கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் இவற்றில் இது ஒரு வகை.

            பிரித்தானியாவில் 5 வயதான ஒரு சிறுமி தன்னுடைய குட்டி தம்பி வளரக்கூடாது, வளர்ந்தால் தனை விட்டுப் பிரிந்துவிடுவான்; தன்னை விட்டு அவன் பிரிந்து விடக்கூடாது என்று அழுகிறாள். அவன் ரொம்ப அழகாக இருக்கிறான் அவன் என்னை விட்டு பிரிந்து விடக்கூடாது என மாலை மாலையாக கண்ணீர் வடிக்கிறாள் இந்த சிறுமி.



சிறுமியின் பெற்றோர் இது தொடர்பில் பிரபல உளவியளார் ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது, 3-5 வயதான குழந்தைகளுக்கு இவ்வாறான எண்ணம் வருவது இயற்கையானது தான். பயப்பட தேவையில்லை, அவ்வாறான எண்ணங்களோடு வாழும் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அதிகமான கவனம் எடுக்க வேண்டும், அதிக அன்பு காட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார், மேலும் சில குழந்தைகளுக்கு IQ அதிகமாக இருப்பதால் மரணத்தை பற்றி அவர்கள்; அதிகம் தெரிந்திருப்பது தான் இதற்குக் காரணம், இதனாலேயே அவர்கள் தன் தம்பியோ, தங்கையோ வளர கூடாது எனவும், அவர்களை விட்டு பிரிந்து விடுவார்களோ என்ற பயமும் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார். 
 
பிரித்தானியாவைச் சேர்ந்த இந்த சிறுமி தன் தம்பியின் பக்கம் திரும்பி அவனை பார்த்த வண்ணம் அழும் வீடியோ பதிவுகளும், புகைப்படங்களும் இணையத்தில் பலரால் தேடப் படுகின்றன.
இதோ காணொளி.. 


17,264 Views
தனுஷ், அமலா பால் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த வேலையில்லாப் பட்டதாரி படத்திற்கு ஏற்கனவே பல எதிர்ப்புகள் வந்தன. 
 
இப்படத்தில் தனுஷ் புகைபிடிக்கும் காட்சி பலரின் எதிர்ப்பை பெற்றது, அனைவரும் அறிந்ததே. ஒருவாறு அதை சமாளித்து, படம் வெளியாகி ஓடிகொண்டிருக்கும் இச்சந்தர்பத்தில் மீண்டும் ஒரு புது சர்ச்சை. 
இப்படத்தில், வேலையில்லாத தனுஷ் தன் தந்தையிடம் என்னை நீங்கள் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படிக்க வைத்ததால் தான் எனக்கு வேலையில்லை, தம்பியை ஜோன் கல்லூரில் படிக்க வைத்ததால் தான் வேலை கிடைத்திருப்பதாக, ஒரு வசனம் அமைந்துள்ளது, 
 
இது ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிகளை அவதூறுப்படுத்துவதாக அமைந்திருப்பதாக சர்ச்சைகள் எழும்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பு ஊர்வலங்களும் நடைபெறுகின்றன. ராமகிருஷ்ணா மிஷன் நிர்வாகம் மற்றும் பழைய மாணவர்கள் என அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், உடனடியாக அவ்வசனத்தை நீக்க வேண்டும் என, தனுஷிற்கு கண்டனக் கடிதங்களும் அனுப்பி வருகின்றனர்.
 
VIP தனுஷ் சுனாமியிலேயே ஸ்விமிங் போடுபவர்; இந்த சிக்கலில் இருந்து எப்படி மீள்கிறார் பார்ப்போம்...
712 Views
இலங்கையின் முன்னாள் சகலதுறை வீரர் சந்திக்க ஹத்துருசிங்க இலங்கை கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக முன்னர் கடமையாற்றியவர்.
அதன் பின் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் ஏற்பட்ட இழுபறிகள், குளறுபடிகள் காரணமாக அவுஸ்திரேலியாவின் Big Bash Leage அணிகளில் ஒன்றான சிட்னி தண்டர் (Sydney Thunder) அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக சிறப்பாக செயற்பட்ட இவரது திறமையைக் கண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இவரைத் தனது பயிற்றுவிப்பாளாராக வளைத்துப்போட்டது.
 
ஹதுரு பங்களாதேஷின் பயிற்றுவிப்பாளர் ஆன பின்னர், இலங்கையின் முக்கிய காய்கள் மீது அவரது சிபாரிசில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கவனம் திரும்பும் என சூரியன் விளையாட்டு நிகழ்ச்சிகளில் அடிக்கடி சொல்லி வந்திருந்தோம்.
 
இப்போது அது நடக்க ஆரம்பித்திருக்கிறது.
 
உள்ளூர் அனுபவத்தை வைத்து நீண்டகாலமாக அடிப்படையிலிருந்து கட்டியெழுப்பபட்டு வந்த இலங்கையின் பயிற்றுவிப்புக் குழாமின் இரு முக்கிய தூண்கள் வங்கப் பக்கம் நகர்வதாகத் தெரியவந்துள்ளது.



இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ருவான் கல்பகேயும், சுழல்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பியால் விஜேதுங்கவும் நேற்று தமது பதவி விலகல் கடிதங்களைக் கையளித்தனர்.
 
இவர்கள் இருவருமே பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடமிருந்து ஒப்பந்தங்களைப் பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது.
 
உறுதியான ஒப்பந்தம், நட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையை விட நம்பிக்கையான ஊதியம் + வசதிகள் வழங்கப்படுவதால் இவர்களது வெளியேறல் உறுதி போலவே தெரிகிறது.
 
நிரந்தர பயிற்றுவிப்பாளர் ஒருவரை பாகிஸ்தானிய தொடரின் பின் இலங்கை தேடவிருப்பதைப் போல, இந்தப் பதவிகளுக்கும் பொருத்தமானவர்களைத் தேடவேண்டி இருக்கும்.
 
இன்று இவர்கள் இருவரையும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் சந்தித்துப் பேசவிருக்கின்றனர்.
இது ஏதாவது நல்ல முடிவுகளைத் தருமா என்று பொறுத்திருந்து தான் அறிந்துகொள்ள முடியும்.
 
3,408 Views
அண்மைக் காலமாக தான் இசையமைக்கும் திரைப்படங்களில் கூட முன்னர் போல  பின்னணி பாடுவதில்லை இசைஞானி இளையராஜா. எதற்காக இந்த கொள்கையை கடைப்பிடிக்க ஆரம்பித்தாரோ தெரியாது. 
           அப்படிப்பட்ட ஒருவரை சீனு ராமசாமி இயக்கி வளர்ந்து வரும் இடம் பொருள் ஏவல் படத்தில், பாடல் ஒன்றை பாடவைக்க அவரது இளைய மகன் யுவன் சங்கர்ராஜா முயன்று வருகிறார். யுவன் இசையில் உருவாகிவரும் இத்திரைப்படத்தில் வைரமுத்து எழுதியுள்ள குறித்த பாடலை இசைஞானி பாடுவாரா என்று எதிர்பார்த்திருந்த அத்தனை ரசிகர்களுக்கும் ஏமாற்றம் கொடுத்திருந்தார் இசைஞானி.
 
வைரமுத்துவின் பாடலை தான் பாடவில்லை என்பதை தன் ரசிகர் மன்ற மூலமாக அறிவித்திருந்தார் இளையராஜா.

    இந்நிலையில், தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ள வை ராஜா வை படத்தில், யுவனின் இசையில் இளையராஜா ஒரு பாடலை பாடி இருக்கிறார். அந்தப் பாடலை எழுதியிருப்பவர் நம்ம கொலைவெறி புகழ் தனுஷ் தான். 

   தனது பாடலை இசைஞானி பாடியிருப்பது பற்றி அதீத புளகாங்கிதத்தை வெளிபடுத்தும் தனுஷ், தனது சமூக வலைத்தளம் ஒன்றில் , நான் எத்தனை பாடல்களை எழுதியிருந்தாலும், எனது இந்தப் பாடலை இளையராஜா பாடியிருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது என்று தன மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 
 
அடிக்கிறதெல்லாம் சிக்சர், பிடிக்கிறதெல்லாம் பெரிய இடமாக பிடிக்கிறார் தனுஷ்.

ஹ்ம்ம் ... வாழ்த்துக்கள் தனுஷ் !
358 Views
மாபெரும் ரசிகர் சமுத்திரத்துடன் நடந்த மிக வெற்றிகரமான சூரியன் மெகா பிளாஸ்ட்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கம் முழுவதும் நிறைந்து வழிந்த அளவு சூரியன் ரசிகர்களோடு சனிக்கிழமை (26ஆம் திகதி) இடம்பெற்றது.

தென்னிந்திய பிரபல நட்சத்திரங்கள் M.K.பாலாஜி, ஷர்மிளா, பிரபு ஆகியோரோடு இலங்கையின் பிரபல இசைக்குழுவான K.கருணாவின் 'சரிகம'வின் இசையில் இலங்கையின் பிரபல உள்ளூர்க் கலைஞர்களும் கலந்து சிறப்பித்த மிகப் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி இது.

சென்சேஷன் நடனக் குழுவின் கண்கவர் நடனங்கள், வாண வேடிக்கை, ஒளிவிளக்கு அலங்காரங்கள், பிரம்மாண்டமான மேடை அமைப்பு என்று இலங்கையில் இதுவரை யாரும் கண்டிராத அற்புதமான பெரும் இசை விழாவாக சூரியன் மெகா பிளாஸ்ட் இடம்பெற்றது.

யாழ்ப்பாண சூரிய நேயர்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்தும் பெருமளவில் வந்திருந்த சூரிய ரசிகர்களால் யாழ்ப்பாணம் நகர் முழுவதும் நிறைந்து ஒரு கொண்டாட்டமான தோற்றத்தை வழங்கியிருந்தது.

எந்தவித சிறு அசம்பாவிதமும் இல்லாமல் அதிகாலை 1.45 வரை நடந்த சூரியன் மெகா பிளாஸ்ட் யாழ்ப்பாணத்தில் இதுவரை நடந்த இசை நிகழ்ச்சிகளில் மிகப் பெரிய ரசிகர்கள் திரண்ட நிகழ்ச்சி என்று சகலராலும் பெருமையாகப் பேசப்படுகிறது.


Click here for Photo Album 1

Click here for Photo Album 2


9,655 Views
சூரியனின்  16வது பிறந்ததின கோலாகல கொண்டாட்டங்கள் இன்று காலை சூரியனின் அலுவலகத்தில் ஆரம்பித்தது. சமய வழிபாடுகளோடு   தொடங்கிய நிகழ்வில், ஆசிய ஊடக வலையமைப்பின் தலைவர் திரு.ரெய்னோர் சில்வா தலைமை தாங்கி நிகழ்வுகளை அலங்கரித்தார்.

அவரோடு அரவிந்த லொக்குகே, தம்மிக பண்டார தென்னக்கோன், சூரியனின் பணிப்பாளர் ஏ.ஆர்.வி.லோஷன் மற்றும் ஏனைய உயரதிகாரிகளும் மாத்திரமில்லாமல், சூரியனின் பிரம்மாண்டமான பிறந்தநாள் பரிசு மெகா ப்ளாஷ்டில் கலந்துகொள்ள வந்திருக்கும் தென்னிந்திய பின்னணி பாடகர்களான எம்.கே.பாலாஜி, சர்மிளா, பிரபு ஆகியோரும் சூரியக் குடும்பத்தினரோடு கலந்து சிறப்பித்தார்கள்.

மதியப் பொழுதில் சூரியனோடு இணைந்திருக்கும் நேய சொந்தங்களுக்காக, உள்ளக கலையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சரிகம கருணாவின் இசைநிகழ்ச்சி  காற்றலையில் நேரலையாக கலந்து இன்னும் பிரமிப்பை அதிகமாக்கியது.

அலங்கரிக்கப்பட்ட அலுவலகம், அன்போடு நிறைந்த நேயர் கூட்டம், மகிழ்ச்சித் திளைப்பின் உச்சியில் முதல்தர வானொலி சூரியன் தனது 16வது அகவை நிறைவை இன்று அலுவலகத்தில் கொண்டாடியது ஒரு சிறப்பெனில், இன்னொரு அசத்தலான சிறப்பு நாளையும் நிகழவுள்ளது.

நம் பாரம்பரியம் பேசும் யாழ் மண்ணில்
மெகா ப்ளாஸ்ட் எனும் நாமத்தோடு - அதிரடி இசை பிரவாகம்

Sooriyan FM 16th Anniversary Celebration - Office Party

503 Views
ரஷ்யாவின் சைபீரியா பிரதேசத்தில் தோன்றிய மிகப்பெரிய பள்ளத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வடக்கு சைபீரியாவின் தீபகற்ப பகுதியான யாமல் பகுதி, ரஷ்யா மற்றும் சைபீரியாவின் எல்லையாக அமைந்துள்ளது.

இயற்கை மற்றும் எரிவாயு அதிகம் உள்ள நிலப்பரப்பு கொண்ட இந்த பகுதியே 'உலகின் கடைசி பகுதி' - End of World என்றும் சமீப காலமாக அழைக்கப்பட்டு வருகிறது.

ஏனெனில் இங்கு கடந்த சில தினங்களுக்கும்  மிகப்பெரிய ராட்சத பள்ளம் ஒன்று தோன்றியுள்ளது.இதன் ஆழம் 262அடியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் ஊகித்துள்ளனர்.





இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், திடீரென இந்தப் பள்ளம் தோன்றியது எப்படி என்பது விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக உள்ளது என்றும் பூமிக்கடியில் உள்ள பாறைகள் இடம் பெயர்வதே இப்பள்ளம் ஏற்பட காரணமாய் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது இதன் ஆழம் குறித்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர். மேலும் இப்பெரும் பள்ளத்தால் உலகத்தின் அழிவின் தொடக்கம் ஏற்பட்டுள்ளதோ? என்று மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ஏற்கெனவே கடந்த வாரம் ரஷ்யாவில் திடீரென ஏற்பட்ட பனிக்கட்டி மழைப் பொழிவு அச்சம் ஏற்படுத்திய பரபரப்பின் பின்னர் இப்போது இந்தப் பள்ளம்.. 

இந்த திடீர்ப் பள்ளத்தின் அதிசய காணொளி இணைப்பு 

ரஷ்யாவில் திடீரெனத் தோன்றிய பள்ளம்.. - உலக அழிவின் ஆரம்பம்? அதிசய காணொளி



 
30,822 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரு வேடமிட்டு ஐஸ்வர்யா ராய் ஜோடி சேர்ந்து 2010இல் வெளிவந்த திரைப்படம் எந்திரன். ஷங்கர் படத்தினை இயக்கியிருந்தார். தனக்கு வில்லனாக ரஜினியே வந்திருந்தார். 
பிரம்மாண்டமான தயாரிப்பு, மாபெரும் வெற்றி.
   இது நமக்கு தெரிந்த செய்திதான்!

புதிய தகவல் என்ன என்றால், எந்திரன் பாகம் 2 தயாராகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இயக்குனர் ஷங்கர் எந்திரன் பாகம் 2 க்கான கதையினை தயாரித்து முடித்துள்ளார்.

இப்பொழுது லிங்கா படம் வேகமாக தயாராகி வருகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கள் முடிந்தவுடன், எந்திரன் 2இன் வேலைகள் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இந்த கதையில், வில்லனாக ரஜினி நடித்த பாத்திரத்துக்கு இம்முறை வேறு ஒரு பிரபலமான நடிகரை நடிக்க வைத்து இன்னும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்து வியாபாரத்தை விரிவாக்கும் திட்டத்தில் இறங்கிய ஷங்கர், வில்லன்னுக்கான நடிகர் தேர்வுகளை நடத்தியுள்ளார். இறுதியில் ஹிந்தி நடிகர் அமீர்கானை சங்கர் தெரிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

எந்திரன் 2 தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வர இருக்கிறது. எனவே, ஹிந்தியில் பிரபலமான அமீர்கானை இப்படத்தில் நடிக்க வைப்பதன் மூலமாக, எந்திரன் 2 ஹிந்தியிலும் அமோக வரவேற்போடு அரங்கம் நிறைக்கும் திரைப்படமாக மாறும் என்பது ஷங்கரின் கணக்கு. 
 
ஆச்சரியப்படும் விதத்தில் அமீர்கானும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 
வித்தியாசமான திரைக் கதைகளையும் சவாலான பாத்திரங்களையும் தேடித் திரியும் அமீர் கானுக்கு இது பரம திருப்தியை அளித்திருக்கிறதாம்.
 
எனினும் அமீர்கான் தரப்பிலிருந்து இது பற்றி உத்தியோகபூர்வ செய்திகள் இதுவரை வரவில்லை.

ஏனைய நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. 
-இன்னும் யாரெல்லாம் இப்படத்தில் வரப்போகிறார்கள் என்று பார்ப்போமே! 
 
ஆனால் லிங்கா 2 படப்பிடிப்பில் ரஜினி நேற்று மயங்கி விழுந்தது தான் இப்போது பலரையும் கலவரப்படுத்தியிருக்கிறது.
634 Views
இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜிம்மி அன்டர்சன் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை அவதூறு செய்தார் ; தள்ளிவிட்டார் என்ற சிக்கலில் தண்டனையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இப்போது இன்னொரு இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு சிக்கல் தேடி வந்துள்ளது.
 
இங்கிலாந்தின் டெஸ்ட் அணியின் 3ஆம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக அண்மைக்காலத்தில் தன்னை நிரூபித்து பிரகாசிக்க ஆரம்பித்துள்ள கரி பலன்ஸ் தான் புதிய சர்ச்சையில் அகப்பட்டுள்ள புதிய குழப்படிகாரர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த இந்திய - இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டியின் பின்னர் நொட்டிங்காம் பிரதேசத்திலுள்ள க்ளப் ஒன்றுக்கு சென்றுள்ள இங்கிலாந்து வீரர்களான ஜோ ரூட், ஜிம்மி அண்டர்சன் (இவர் ஏற்கெனவே சிக்கலில் மாட்டியுள்ளவர்), லயம் பிளங்கட் ஆகியோரோடு மது அருந்திய பலன்ஸ், கொஞ்ச நேரத்துக்குப் பின் நிதானம் தவறியவராக தனது மேற்சட்டையைக் கழற்றி கலாட்டாவில் ஈடுபட்டுள்ளார்.
 
"இங்கிலாந்து, இங்கிலாந்து " என்று கூச்சல் போட்டுக்கொண்டே உற்சாக மிகுதியால் கூத்தாடிய பலன்ஸ் இறுதியில் நிறை போதையில் மற்றவர்களால் தூக்கிச் செல்லப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.
 
இதுபற்றி அறிந்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை பலன்சுக்கு எச்சரிக்கை வழங்கியுள்ளது. 
5,338 Views
அண்மையில் மேடை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் போது இடம்பெற்ற அசம்பாவிதமே இது.. நடிகை பத்மப்பிரியா இயக்குனர் சேரனுடன் 'தவமாய் தவமிருந்து' திரைப்படத்தில் நடித்தவர், அதை தொடர்ந்து 'பட்டியல்' , 'சத்தம் போடாதே', 'மிருகம்', 'பொக்கிஷம்', 'இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம்' , 'தங்கமீன்கள்'  போன்ற படங்களில் நடித்திருந்தார். 
ண்மையில் பிரம்மன் திரைபடத்தில் ஒரு பாடலுக்கு குத்து நடனம் போட்டிருந்த இவர் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட மேடை நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்கியிருந்தார்.

 இந்தசந்தர்ப்பத்தில் பிரபலங்களை மேடைக்கு அழைக்கும் போது இரண்டு மூன்று தடவைகள் இயக்குனர் இமயம் பாரதிராஜாவைப் பார்த்து திரு. பாக்கியராஜ் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம் என்று அழைத்திருக்கின்றார். இது இரு முறை நடந்திருக்கிறது, உடனேயே ஒரு ஓரமாக அமர்ந்திருந்த பாக்கியராஜ் அவர்கள் 'அம்மா நா தான்மா பாக்கியராஜ் அவர் பாரதிராஜா" என கூறியும் பத்மபிரியா தொடர்ந்து அதே தவறை செய்துள்ளார். 
 
இது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பத்து ஆண்டு காலமாக சினிமாவிலுள்ள இவருக்கு பாரதிராஜாவையும், பாக்யராஜையும் அடையாளம் தெரியாமல் இருந்தமை என்பது அனைவரின் கோபப்பார்வையையும் பத்மபிரியாவின் பக்கம் திருப்பியது. இது இவ்வாறிருக்க இவருடன் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய சக தொகுப்பாளர், இயக்குனர் இமயம் என்றழைக்கப்படும் பாரதிராஜாவைப் பார்த்து 'இயக்குனர் சிகரம்' என்று அழைத்துள்ளார் இது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போன்ற ஒரு சம்பவமாக அமைந்துள்ளது.



சச்சின் டென்டுல்கரைத் தெரியாது என்று சொன்ன மரியா ஷரப்போவாவாவது ரஷ்யாவைச் சேர்ந்தவர்.
 
தமிழ் உலகமே அறிந்த இரு இயக்குனர்களைத் தெரியாமலே பத்து வருடங்களாக சினிமாவில் குப்பை கொட்டும் இவரை என்னவென்பது?

இன்னொரு சுவாரஸ்ய விஷயம் இன்று இயக்குனர் இமயத்தின் பிறந்தநாள்.
544 Views

ஜெர்மானியர்கள் அதிர்ஷ்டங்கள் தரும் சகுனங்கள், அதிர்ஷ்ட இலக்கங்கள் போன்றவற்றில் நம்பிக்கை உடையவர்கள்.

இம்முறை தமது நாட்டு அணி உலகக்கிண்ணம் வென்றதற்கு 7ஆம் இஇலக்க அதிர்ஷ்டம் ஒரு முக்கிய காரணம் என நம்புகிறார்கள் மகிழ்ச்சியில் திளைக்கும் ஜெர்மானியர்கள்.

தமது 4வது வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்த ஜேர்மனிக்கு எண் 7 அதிர்ஷ்டம் வாய்ந்ததாக இருந்தது  எப்படி எனப் பார்ப்போம்...

* ஆண்டு 2014 ஐ கூட்டினால் வருவது 7 ஆகும்
* மாதம் - ஜூலை (7)
* GERMANY என்ற எழுத்துகளின் எண்ணிக்கை 7.
* போட்டி நடந்த நாடு BRAZIL =2+2+1+7+1+3 = 1+6 = 7
* ஜேர்மன் அணி G பிரிவில் போட்டியிட்டது. ஆங்கில அகரவரிசைப்படி G என்பது 7ஆவது எழுத்தாகும்.
* இம்முறை அதிக கோல்களை ஜேர்மன் அணி பெற்றது பிரேசிலுடன் (7 – 1) ஆகும்.
* வெற்றிக் கோலை பெற்றுத் தந்த Mario Gotze மாற்று வீரராக களமிறக்கப்பட்டது 88ஆவது நிமிடத்தில் ஆகும். 8+8 =1+6 = 7
* அவரது பெயரின் முதலெழுத்துகளைக் கூட்டினால் வருவது M + G = 7 ஆகும்.

என்ன அசந்து விட்டீர்களா?

 
483 Views
[1]      «      1645   |   1646   |   1647      »      [1654]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top