இந்த புகைப்படங்கள் சமூக ஊடக குழுக்களிலும், வாட்ஸ்-ஆப் குழுக்களிலும் பல்லாயிரம் முறை பகிரப்பட்டு வருகின்றன.
இந்திய வான் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படையின் இரண்டு ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கடந்த புதன்கிழமை பாகிஸ்தான் கூறியது.
ஒரு விமானம் பாகிஸ்தான் பகுதியில் விழுந்ததாகவும் அதன் விமானி கைது செய்யப்பட்டார் என்றும் பாதுகாப்பு படைகளின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
அதே வேளை ஒரு விமானியை காணவில்லை என்று இந்தியாவும் உறுதி செய்தது.
FEB 14ஆம் திகதி இந்திய துணை ராணுவ படை மீது ஆயுதக்குழுக்கள் தாக்குதல் நடத்தியதில் 40க்கும் மேலான C.R.P.F படை வீரர்கள் பலியானர்கள். அதனை அடுத்து இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்தது.
இதற்கு மத்தியில் பல இந்திய சமூக ஊடகங்கள் இந்திய விமானப் படை வீரர்கள் படங்களை பகிர தொடங்கின.
ஆனால், இந்த புகைப்படங்களுக்கும் பாகிஸ்தானில் இந்தியா மேற்கொண்டதாக கூறப்படும் வான் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இதே வேளை பாகிஸ்தானில் வான் தாக்குதல் நடத்தியவர் இவர்தான் என்று கையில் ஹெல்மட் வைத்திருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகிறது.
முயகலாவது படத்தில் உள்ள பெண்ணின் பெயர் அனிதா ஷர்மா என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்த பதிவுகளில், "#AnitaSharma துணிச்சலான இந்த வீரரை வாழ்த்துங்கள். பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் இருந்த ஒரே பெண் இவர்தான்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இரண்டாவது புகைப்படத்தில் இருப்பவர் ஸ்நேகா சகாவத். 2012ஆம் ஆண்டு நடந்த குடியரசு தின அணிவகுப்பில் இந்தியா விமானப் படை பிரிவுக்கு இவர்தான் தலைமை தாங்கினார்.
மூன்றாவது புகைப்படம் புல்வாமா தக்குதலுக்கு பழிவாங்கிய போர் விமானிகள் 12 பேர் இவர்கள்தான் என ஒரு புகைப்படம் பகிரப்படுகிறது.
புகைப்படத்தை ஆராயும் தொழில்நுட்பத்தை கொண்டு ஆராய்ந்ததில் அந்த புகைப்படம் 2015ஆம் ஆண்டு நடந்த இந்திராதனுஷ் பயிற்சியில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. ராயல் விமானப் படையும், இந்திய விமானப் படையும் இணைந்து அந்த 10 நாள் பயிற்சியை மேற்கொண்டன.