தொலைக்காட்சி தொடர்கள் சினிமா அளவிற்கு வளர்ச்சி பெற்று வருகின்றன. குறிப்பாக சில தொடர்களின் நாயகி நாயகன் இடையே நெருக்கம் அதிகாமாக இருக்கும் காட்சிகள் வைப்பதும் இப்பொழுது சர்வ சாதாரண ஒன்றாகி விட்டது.
இந்நிலையில் தாயன் என்கிற ஹிந்தி நாடகத்தில் நடித்துவரும் நடிகை டினா, தத்தாவிடம் அந்த நாடக கதாநாயகன் 'மோஹித் மல்ஹோத்ரா' தகாத முறையில் தொட்டதாக கூறியுள்ளார். அந்த சம்பவம் நடந்த மறுநாள் நடிகை படப்பிடிப்பில் அழுது கொண்டே இருந்துள்ளார்.
அது பற்றி டினா தத்தாவிடம் கேட்டபோது, "படப்பிடிப்பு நடத்தும்போது மோசமான பல பிரச்சனைகள் வருகிறது. அது பற்றி தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளேன். இனி அப்படி நடந்தால் அனைவர் முன்னிலையில் கூறிவிடுங்கள் என கூறியுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தகாத முறையில் மோஹித் நடந்ததை உறுதி செய்துள்ளார் அந்த நடிகை.