இந்தியாவின் மும்பை உள்ள தேனா வங்கியில் திருட்டில் 3 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது. கடந்த மாதம் 2-ந் திகதி குறித்த மூவரும் வங்கியின் கழிவறை வழியாக உள்ளே சென்றுள்ளார்கள். உள்நுழைந்த அவர்கள் வங்கி லொக்கெர்ஸை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.
ஆனால் அவர்களால் லொக்கெர்ஸை எந்த வழியிலும் உடைக்க முடியவில்லை. வந்த திருடர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இந்தநிலையில் அங்கு 1 ரூபாய் நாணயங்கள் அடங்கிய மூட்டை ஒன்று இருந்ததை அவதானித்த அவர்கள், அதையாவது எடுத்துச் செல்லலாம் என்று அதை திருடி சென்றுள்ளார்கள்.
குறித்த ஒரு ரூபா அடங்கிய மூட்டையில் இந்திய ரூபா பெறுமதிக்கு 16 ஆயிரத்து 700 ரூபா மதிப்புள்ள 1 ரூபா நாணயக் குற்றிகள் இருந்துள்ளன. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்தப்பட்டது. அத்துடன் CCTV காணொளி பதிவை ஆய்வு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களின் உருவம் தெளிவாக பதிவாகாததால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்துள்ளார்கள்.
எவ்வாறான போதிலும் விசாரணைகளை முடுக்கிவிட்ட காவல்துறையினர் குறித்த கொள்ளையில் ஈடுபட்ட காசிநாத் வசந்த், சேத்தமன் மனோகர், பிரசாந்த் பண்ட்ரே ஆகியோரே என்று கண்டறிந்துள்ளார்கள். ஒரு ரூபா கொள்ளையில் ஈடுபட்ட குறித்த மூவரையும் வெவ்வேறு இடங்களில் வைத்து அதிரடியாக கைதுசெய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 11 ஆயிரம் ரூபா மதிப்புள்ள நாணயங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளார்கள்.