மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிகையாளர் கசோகியின் பிள்ளைகளுக்கு கோடிக்கணக்கான சொத்துக்களை சவுதி அரசாங்கம் வழங்கியுள்ளதாக, வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி, அமெரிக்காவின் வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பத்திகையாளராக பணி புரிந்து, பல விமர்சனங்களை எழுதிவந்தவர். குறிப்பாக சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் குறித்தும், அந்நாட்டின் மன்னராட்சி குறித்தும் கடுமையாக விமர்சித்து, கட்டுரைகளை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், கடந்த 2018 ஆண்டு, ஒக்டோபர் 2ல் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு சென்ற அவர், மர்மமாக கொலை செய்யப்பட்டடார். இவரது கொலை தொடர்பில் இன்றும் மர்மம் நீடித்து வரும் நிலையில், கசோகியின் பிள்ளைகளுக்கு சவுதி அரேபிய அரசாங்கம் சொத்துக்கள் மற்றும் பல்வேறு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளது.
கசோகிக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ள நிலையில், சவுதியின் ஜெட்டா நகரில் இந்திய ரூபா பெறுமதிக்கு 27 கோடியே, 67 லட்சம் மதிப்புள்ள வீட்டை சவுதி அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது மாத்திரமின்றி ஒவ்வொரு மாதமும் 7 லட்சம் இந்திய ரூபா பணத்தையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன.